Sunday, January 1, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தழங்குதல்


ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  தழங்குதல்

வார்த்தைதழங்குதல்
பொருள்
  • ·         முழங்குதல்
  • ·         விம்முதல் 
  • ·         முரலுதல்
  • ·         புலம்புதல்
  • ·         பிளிறுதல்
  • ·         பிறங்குதல்


குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என் விதி இன்மையால்
தழங்கு_அரும் தேன் அன்ன தண்ணீர் பருக தந்து உய்ய கொள்ளாய்
அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

திருவாசகம்மாணிக்க வாசகர்

இறைவனே! உன் அருளாகிய அமிர்தத்தை நீ கொடுக்க, நான் அள்ளியுண்டு நல்லூழின்மையால் விக்கி வருந்து கின்றேன். ஆதலால் எனக்குத் தேன் அன்ன உன் கருணையாகிய தண்ணீரைக் கொடுத்து உய்யக் கொண்டருள வேண்டும். அடியேன் உன் அடைக்கலமே!.

2.
தடம் கொள் வரைச் சாரல் நளுங்கும் மயில் பேடை தழங்கும்
இயல் பாடி அளி சூழ .

திருப்புகழ் - அருணகிரிநாதர்

நீர் நிலைகளைக் கொண்ட மலைச்சாரல்களில் நடுங்குகின்ற மயிலும் அதன் பேடையும் ஒலி செய்யும்படியாக பாடி முரலும் வண்டுகள் சூழ...

3.
சங்கநா தங்க ளொலிப்பத்,தழங்குபொற் கோடு முழங்க,
மங்கல வாழ்த்துரை யெங்கு மல்க, மறைமு னியம்பத்,
திங்களும் பாம்பு மணிந்தார் திருப்பதி யெங்குமுன் சென்று
பொங்கிய காதலிற் போற்றப் புகலிக் கவுணியர் போந்தார் .

பெரிய புராணம் - சேக்கிழார்

சங்குகளின் நாதம் ஒலிசெய்யவும்  விளங்கிய அழகிய கொம்புகள் முழங்கவும்  மங்கலமாகிய வாழ்த்து உரைகள் எங்கும் பொருந்தவும்  முன்னே வேதங்கள் பயிலவும்  சந்திரனையும் பாம்பினையும் அணிந்த சிவபெருமானது திருத்தலங்கள் எங்குமுள்ளனவற்றில் முன் சென்று மேன்மேலும் பொங்கும் விருப்பத்தினுடன் துதிக்க சீகாழிக் கவுணியர் குலதனமாகிய பிள்ளையார் எழுந்தருளிச் சென்றனர்.


No comments:

Post a Comment