Tuesday, January 3, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – செப்பன்


ஓவியம் : இணையம்


'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  செப்பன்

வார்த்தை :  செப்பன்
பொருள்

·         செவ்வை
·         நடுநிலை
·         சீர்திருத்தம்
·         பாதுகாப்பு
·         செவ்வியவழி
·         தெரு
·         நெஞ்சு
·         மனநிறைவு
·         ஆயத்தம்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
*செப்பம்* உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தரும்.

2.
துப்பனே தூயாய் தூய வெண்ணீறு துதைந்து எழு துளங்கு ஒளி வயிரத்து
ஒப்பனே உன்னை உள்குவார் மனத்தில் உறு சுவை அளிக்கும் ஆர் அமுதே
*செப்பம்* ஆம் மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அப்பனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

திருவாசகம் - மாணிக்க வாசகர்

பவளம் போன்றவனே! தூய்மையானவனே! தூய்மையான வெண்ணீறு படிந்து தோன்றுகின்ற விளக்கமாகிய ஒளி, வயிரம் போன்று பிரகாசிப்பவனே! உன்னை இடைவிடாது நினைக்கின்றவர் மனத்தில் மிகுந்த சுவையைக் கொடுக்கின்ற அரிய அமுதமே! திருத்தமாகிய வேதங்கள் ஒலிக்கின்ற திருப்பெருந்துறையின்கண் செழுமையான மலர்களையுடைய குருந்த மரநிழலைப் பொருந்திய சிறந்த தந்தையே! அடியேன் அன்போடு அழைத்தால் அஞ்சாதே என்று சொல்லி அருள்புரிவாயாக!.

3.
பாய்ந்தவன் காலனைமுன் பணைத் தோளியொர் பாகமதா
ஏய்ந்தவ னெண்ணிறந்தவ் விமை யோர்க டொழுதிறைஞ்ச
வாய்ந்தவன் முப்புரங்க ளெரி செய்தவன் வக்கரையில்
தேய்ந்திள வெண்பிறைசேர் சடை யானடி *செப்புதுமே*.

தேவாரம் - 3ம் திருமுறை - திருஞான சம்பந்தர்


மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் சிவபெருமான் உதைத்தவன் . பருத்த தோள்களை உடைய உமா தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . எண்ணற்ற தேவர்களால் தொழுது போற்றப்படுபவன் . முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவன் . திருவக்கரை என்னும் திருத்தலத்தில் தேய்ந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சடையில் சூடி வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானின் திருவடிகளை வணங்கிப் போற்றுவோமாக !

No comments:

Post a Comment