Showing posts with label உமா மகேஸ்வர ஸ்ம்வாதம். Show all posts
Showing posts with label உமா மகேஸ்வர ஸ்ம்வாதம். Show all posts

Wednesday, June 1, 2016

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 4





உமை :  நான்கு வகையான வழிமுறைகளான பிரம்மச்சாரியன், கிரகஸ்தன், வான பிரஸ்தன் மற்றும் சந்நியாசி இவர்களின் கடமைகளை கூறுங்கள்.

   சிவன் :எல்லா வகையிலும் கிரகஸ்தர ஆஸ்ரமமே முதன்மையானதும்  முக்கியமானதும்ஆகும். நீராடுதல்தன் மனைவியோடு திருப்தியாக இருந்தல்தானம்,யாகம் போன்றவை விட்டப்போகாமல் காத்தல்விருந்தினர்களை உபசரித்தல்மனம் வாக்கு செயல் ஆகிய எல்லாவற்றாலும் ஒன்றாக இருத்தல்பெரும்  துன்பங்களையும் ஏற்றுக் கொள்ளுதல்  ஆகியவை முக்கிய தர்மங்கள். 
          மனவுறுதியுடன் காட்டில் இருந்தல், நல்ல பழங்களை உண்ணுதல், தரையில் படுத்தல் சடை தரித்தல், தோல் ஆடை அணிதல், தேவர்களையும் விருந்தினர்களையும்  உபசரித்தல் ஆகியவை வானபிரஸ்தனின் முக்கிய கடமைகள். 
  வீட்டை விட்டு வெளியே வசித்தல், பொருள் இல்லாமல் இருத்தல், பொருளீட்ட முயற்சிக்காமலும் இருத்தல், கள்ளமில்லாமல் இருத்தல், எங்கும்  யாசித்து  உணவு பெறுதல், எந்த தேசம் சென்றாலும் தியானத்தை கைவிடாமல் இருந்தல். பொறுமை தயையுடன்  இருந்தல், எப்பொழுதும் தத்துவ ஞானத்தில் பற்று  கொண்டு இருத்தல் போன்றவை  சந்நியாசியின் தர்மங்கள்.

   உமை :  இந்த ரிஷிகள் தவம் இயற்றுதலை முதன்மையாகக் கொண்டுள்ளனர்.  அது குறித்து விளக்க வேண்டும். 

  சிவன் : கிரகஸ்தனாக இருந்து நன் மக்களைப் பெறுவதால் பித்ரு கடன் நீங்கும்.  உறுதியுடன் மனதை அடக்கி மனைவியுடன் வானப்ரஸ்தத்தில்  வசிக்க வேண்டும். சாஸ்திரத்தில் சொல்லப்பட்டவாறு(தன் குருவின் வழி - என்று நான் பொருள் கொள்கிறேன்) தீஷை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறந்த புண்ணிய நதிகளில் நீராட வேண்டும். மனம் சலியாமல் அனுட்டானம் செய்ய வேண்டும் விருந்தினர்களை  அன்புடன் வரவேற்று, இருக்கை அளித்து அவர்களுக்கு  அன்னம் இடவேண்டும். இது வான பிரஸ்தனின் கடமைகள். 
  வனத்தை ஆச்சாரியன் போல் கருதி வசிக்க வேண்டும்.விரதங்களையும்(உணவினை விலக்குதல்), உபவாசக்களையும்(இறை நினைவோடு இருத்தல்) மிகுதியாக கொள்ளவேண்டும். ரிஷிகளில் சிலர் மனைவிகளோடு இருக்கிறார்கள். அவர்கள் விந்திய மலைச் சாரலிலும், நதிக் கரையிலும் வசிக்கிறார்கள். அவர்களும் தவ  சீலர்களே. கொல்லாதிருத்தல், தீங்கு செய்யாதிருத்தல், பிற உயிர்கள் இடத்தில் அன்போடு இருத்தல், தன் மனைவியோடு மட்டும் சேர்ந்து இருத்தல்  ஆகியவைகளும் இவர்களது தர்மத்தில் அடக்கம். 

   உமை :  மூன்று விதமான மனிதர்கள் எப்போதும் காணப்படுகிறார்கள். எவ்வித  முயற்சியும் இன்றி உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைந்து அனுபவிக்கின்றனர், சிலர் முயற்சி செய்து உயர் நிலைகளை அடைகின்றனர்.  மற்றவர்கள் எந்த முயற்சி செய்தாலும் ஒன்றையும் அடைய இயலாதவராக  இருக்கின்றனர், அது ஏன்?

   தொடரும்..

        *வாருணை  - மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்

  புகைப்படம் : இணையம்


Wednesday, May 4, 2016

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 2



(
இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை
தொடக்கம் 204 அத்யாயம்.

கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்து 'உலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும்கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்என்றனர்.

'நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லைஅதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.

எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர்கிருஷ்ணருக்கு அன்பானவர்பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்

அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.

)

        உமை  வேறு வாகனங்கள் இருக்கையில் நீங்கள் ஏன் ரிஷபத்தை வாகனமாக கொண்டுள்ளீர்கள்?

சிவன்  : முன் சிருஷ்டியில் பசுக்கள் வெள்ளை நிறமுடையனவாக இருந்தன. அப்போது உலக நன்மைக்காக ஒற்றைக்காலில் நின்று தவம் செய்து கொண்டு இருந்தேன். அப்போது அந்த பசுக்கள் நான் இருந்த இடம் வந்து அந்த இடத்தை இடித்தன. அதனால் கோபம் கொண்டு அப்பசுக்களை எரித்துவிட்டேன். அதில் இந்த ரிஷபம் தன் தவறை உணர்ந்து என்னிடம் வேண்டிக் கொண்டது.

அது முதல் பசுக்கள் அடக்க உள்ளவைகளாகவும், பல நிறமுடையவைகளாகவும் ஆயின. சாபம் விலக்கப்பட்டதால் இப் பசு மாத்திரம் வெள்ளை நிறமுடையதாகவும், எனக்கு வாகனமாகவும் ஆனது.அதனால் தேவர்கள் என்னை பசுபதியாகச் செய்தனர்.

உமை  மங்களகரமான வீடுகளும், அதில்  அழகிய விலங்குகளும் பிராணிகளும் இருக்கையில் நீர் ஏன் மயிர்களாலும், எலும்புகளாலும் அருவருக்கத்தக்க மண்டை ஓடுகள் நிரம்பியதும் , நரிகளும் கழுகளும் சேர்ந்திருக்கும் பிணப்புகையினால் மூடப்பட்டதுமான மிகக் கொடிய பயங்கரமான மயானத்தில் சந்தோஷமாக இருக்கீறீர்? அது எதனால் என்று எனக்கு சொல்லக் கடவீர்.

சிவன்  : முன்னொரு யுகத்தில் வெகு சுத்தமான இடத்தை நான் தேடி அடைந்த போது சுத்தமான இடம் கிடைக்கவில்லை. அப்போது பூதசிருஷ்டி உண்டானது. கொடிய கோரப்பற்களை உடைய பிசாசுகளும், பிற உயிர்களை கொன்று உண்ணும் பூதங்களும் உலகம் எங்கும் திரிந்தன. இவ்வாறு பிராணிகள் இல்லாததால் உலகை இப் பூதங்களிடம் இருந்து காப்பதற்காக பிரம்ம தேவர் இப் பூத, பிசாசங்களை அழிக்குமாறு வேண்டிக் கொண்டார். பிராணிகளின் நன்மைக்காக நான் இதை ஏற்றிக் கொண்டேன்.

இம் மயானத்தை விட பரிசுத்தமான இடம் வேறு எதுவும் இல்லை. மனித சஞ்சாரம் இல்லாததால் இம் மயானம் மிகப் புனிதமானது. எனவே பூதங்களை மயானத்தில் நிறுத்தினேன். அவைகளை விட்டுப் பிரிய மனம் இல்லை. எனவே தவம் செய்பவர்களும், மோட்சத்தை விரும்புவர்களும் பரிசுத்தமான இம் மயானத்தை விரும்புகிறார்கள். வீரர்களில் இடமாக இருப்பதால இதை நான் எனது இடமாகக் கொண்டேன்.

காலைப் பொழுதிலும், அந்தி சந்தியிலும், ருத்ர தேவதையான திருவாதிரை நட்சத்திரத்திலும் தீர்க்க ஆயுளை விரும்புவர்கள் செல்லக் கூடாது. இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?

உமை  உமது நிறம் செம்மட்டை நிறமானதும் விகாரமும் பயங்கரமானதும் சாம்பல் பூசப்பட்டதாகவும் விகாரமான கண்கள் உடையதாகவும் கூரான கோரைப்பற்கள் உடையதாகவும் ஜடை உடையதாகவும் புலியின் தோல் உடுத்தியதாகவும் உமது நிறம் செம்மட்டை நிறமானதும் விகாரமும் பயங்கரமானதும் சாம்பல் பூசப்பட்டதாகவும் விகாரமான கண்கள் உடையதாகவும் கூரான கோரைப்பற்கள் உடையதாகவும் ஜடை உடையதாகவும் புலியின் தோல் உடுத்தியதாகவும் இருப்பது ஏன்?

தொடரும்..
                           
                               *வாருணை  - மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்

               புகைப்படம் : இணையம்