Thursday, January 22, 2015

மகேசுவரமூர்த்தங்கள் 15/25 கங்காளர்



வடிவம்(பொது)

·   உருவத் திருமேனி
·   வாம தேவ முகத்திலிருந்து தோன்றிய வடிவம்
·   வாமனனைக் கொன்று முதுகெலும்பை தண்டமாக வைத்துக் கொண்ட வடிவம்(கங்காளம் -  முதுகு எலும்பு)
·   கங்காளம் - வாத்தியம். உடுக்கைவிட பெரியதானது. முழவை விட சிறியதானது அதே வடிவில் இருக்கும். நடுசிறுத்திருக்கும். கையால் மீட்டப்படுவது வழக்கம். நின்ற கோலம்
·   இடக்கால் பூமியில் நன்கு ஊன்றியபடி இருக்கும்;
·   வலக்கால் சற்றே வளைந்து அவர் நடந்து செல்வதைக் காட்டியபடி.
·   ஊமத்தை மலர், சர்ப்பம், பிறை ஆகியவற்றைச் சூடிய ஜடாமகுடம்.
·   மகிழ்ச்சி நிறைந்த முகம், இனிய பாடல்களை இசைத்துக் கொண்டு, புன்முறுவல் பூத்தபடி
·   முத்துப் போன்ற பற்கள் பாதி தெரியுமாறு வாய்
·   இரு காதுகளிலும் சாதாரண குண்டலங்கள் அல்லது வலக்காதில் மகரகுண்டலமும், இடக்காதில் சங்கபத்திரம்
·   நான்கு கரங்கள்
·   முன் வலக்கரம்  - பாணத்தையும்,
·   முன் இடக்கரம்உடுக்கை
·   பின் வலக்கரம் நீண்டு வளர்ப்புப் பிராணியான மானின் வாய்க்கருகே கடக ஹஸ்தம்.
·   பின் இடக்கரத்தில் கங்காளதண்டம்அதில் இறந்தோரது எலும்புகள் கட்டப்பட்டிருக்கும்மயில் இறகாலும் கொடியாலும் அது அலங்கரிக்கப்பட்டிருக்கும்படுக்கை வாட்டில் இக்கங்காள தண்டமானது இடது தோளில் வைத்து, அதன் ஒரு முனையைப் பின் இடக்கையில் பற்றி இருப்பார்
·   ஆடை - புலியாடை
·   அரையில் கச்சமும், அதில தங்கத்தாலமைந்த ஒரு சிறுவாள் வெள்ளிப் பிடியுடன்
·   திருவடியில் மரப் பாதுகைக ள்
·   உடலெங்கும் பாம்பு அணிகலன்களாக
·   அவரைச் சுற்றிலும் எண்ணற்ற பூதகணங்களும் பெண்டிரும் ஆடியும் பாடியும் கூடியிருப்பர்ஒரு பூதம் பெரிய பாத்திரம் ஒன்றைத் தனது தலைமீது வைத்துக் கொண்டு இடப்பக்கம் நிற்கும்பிச்சை ஏற்கும் உணவு வகைகளைச் சேமித்து வைக்கவே அப்பாத்திரத்தை அப்பூதம் சுமந்து நிற்கும்
·   கங்காளமூர்த்தியிடம் கொண்ட காமத்தால் பெண்டிர் ஆடைநெகிழ நிற்பர்எண்ணற்ற முனிவர், தேவர், கந்தருவர், சித்தர், வித்தியாதரர் ஆகியோர் இவரைச் சுற்றி நின்று கைகுவித்து அஞ்சலி செய்து கொண்டிருப்பர்.
·   இவருக்கு முன்னால் வாயு தெருவைச் சுத்தம் செய்வார்;
·   வருணன் நீர் தெளிப்பார்;
·   பிறதேவர்கள் மலர் தூவிப் போற்றுவர்;
·   முனிவர்கள் வேதம் ஓதுவர்;
·   சூரியனும், சந்திரனும் குடைபிடிப்பர்;
·   நாரதரும் தும்புருவும் தம் இசைக் கருவிகளுடன் பெருமானுக்கு உகந்த பாடல்களைப் பாடுவர்.

வேறு பெயர்கள்

கங்காள மூர்த்தி

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

·         உத்திராபசுபதீஸ்வரர், திருச்செங்காட்டங்குடி,திருவாரூர் மாவட்டம்
·         கருணாசுவாமி, வசிஷ்டேஸ்வரர் - கருந்திட்டைக்குடி (கரந்தை)
·         கங்களாஞ்சேரி , திருவிற்குடி, திருவாரூர் மாவட்டம்
·         நாகேசுவர சுவாமி கோயில், கும்பகோணம்
·         சுசீந்திரம்,
·         தென்காசி,
·         தாராசுரம்
·         விரிஞ்சிபுரம்
·         திருநெல்வேலி


இதரக் குறிப்புகள்

#

பிட்சாடனர்
கங்காளர்
அந்தகாசுர சம்ஹார மூர்த்தி
1
அருகில்


அம்மை
2
வலது மேல் கை
உடுக்கை
கீழ் வரை நீண்டிருக்கும். அதில் மானுக்கு புல் இருக்கும்
சூலம்(சில விக்கிரகங்களில் சூலத்தில் அந்தகன் சடலமாக தொங்குவது போல தோற்றம்)
3
வலது கீழ் கை
மானுக்கு புல்
உடுக்கைக்குரிய கோல்
4
இடது மேல் கை
சூலம்
சூலம் அல்லது தண்டு அதில் விஷ்ணுவின் சடலம்
மான் மழு
5
இடது கீழ் கை
கபாலம்
உடுக்கை
6
மேனி
நிர்வாணக் கோலம்
ஆடையுடன் கூடிய  கோலம்

7
காலின் கீழ்


அந்தகாசுரன்

நூல்கள்

அம்சுமத் பேதாகமம்,
காமிகாமம்,
காரணாகமம்,
சில்பரத்தினம்

1.
'வள்ளல் கையது மேவுகங்காளமே-  திருஞானசம்பந்தர்,
'கங்காள வேடக்கருத்தர்' - திருநாவுக்கரசர்,
'கங்காளம் தோள் மேலே காதலித்தான்' - மணிவாசகர் .

2.
"குறளா யணுகி மூவடிமண் கொண்டு நெடுகி மூவுலகுந்
 திறவான் அளந்து மாவலியைச் சிறையிற் படுத்து வியந்தானை
இறவேச வட்டி வெரி நெலும்பை யெழிற் கங்காளப்படையென்ன
அறவோர் வழுத்தக் கைக்கொண்ட அங்கணாணன் திருவுருவம்"

 - காஞ்சிப்புராணம்.

3
பெருங்கடல் மூடி பிரளயம் கொண்டு பிரமனும் போய்
   இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ண களேபர மும்கொண்டு கங்காளராய்
   வருங்கடல் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே.

அப்பர் சுவாமிகள் தேவாரம்

4.
கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால் இறகுலர்த்திக் கூதல்நீங்கி
செங்கால்நன் வெண்குருகு பைங்கானல் இரைதேருந் திருவையாறே.

தேவாரம் - 1.130.3

5.
'கங்காளர் தனி நாடகம் செய்தபோது அந்தகாரம் பிறண்டிட நெடும்' - அருணகிரிநாதர் மயில் விருத்தம்

புகைப்பட உதவி : இணையம்

Thursday, January 1, 2015

மகேசுவரமூர்த்தங்கள் 14/25 தட்சிணாமூர்த்தி



பல இடங்களில் கோஷ்டத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தியும், நவகிரக சன்னதிகளில் இருக்கும் குரு பகவானும் ஒன்றாகவே கருதப்படுகிறது. என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் இரண்டும் வேறு வேறானவை.

வடிவம்(பொது)

·         தட்சிணம் என்றால் தெற்கு, த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் சேர்ந்து தட்சிணா மூர்த்தி
·         பஞ்சகுண சிவமூர்த்திகளில் சாந்த மூர்த்தி
·         பிரம்மாவின் குமார்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகியவர்களுக்கு குரு
·         நான்கு கைகள்
·         இருப்பிடம் - ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி
·         திருமேனி - பளிங்கு போன்ற வெண்ணிறம் - தூய்மை
·         வலதுகால்  கீழ் - 'அபஸ்மரா' (அறியாமையை / இருளை )என்ற அரக்கனை(முயலகன்) மிதித்த நிலையில் - அனைத்து தீமைகளையும் அடக்கி ஆளும் வலிமை
·         ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலை(36 அல்லது 96 தத்துவங்கள்) / ஒரு பாம்பு
·         அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பு
·         கீழ் இடது கையில் தர்பைப் புல் / ஓலைச்சுவடி(சிவஞான போதம்) / அமிர்தகலசம் -  அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்க வல்ல ஆற்றல்
·         கீழ் வலது கையில் ஞான முத்திரை(மும்மலங்களை விலக்கி இறைவன் திருவடி அடைதல்)
·         ஆடை - புலித்தோல் - தீயசக்திகளை அடக்கியாளும் பேராற்றல்
·         தாமரை மலர்மீது அமர்ந்த கோலம் - இதயதாமரையில் வீற்றிருத்தல்(ஓங்காரம்)
·         நெற்றிக்கண் -  காமனை எரித்தல்; புலனடக்கம் உடையராதல் - துறவின் சிறப்பு
·         ஆலமரமும் அதன் நிழலும் - மாயையும் அதன் காரியமாகிய உலகம்
·         அணிந்துள்ள பாம்பு - குண்டலினி சக்தி
·         வெள்விடை - தருமம்
·         சூழ்ந்துள்ள விலங்குகள் - பசுபதித்தன்மை
·         த்யான ரூபம்
·         ஆசனம் - மகாராஜலீலாசனம், அர்த்தபத்மாசனம், யோகாசனம், உத்குடிக்காசனம்

வேறு பெயர்கள்

தெக்கினான்
ஆலமர் செல்வன்
தெற்கு நோக்கி இருப்பதால் தென் திசைக் கடவுள்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

·         புளியறை,செங்கோட்டை வட்டம்,    திருநெல்வேலி மாவட்டம்
·         பட்டமங்கலம் - சிவகங்கை மாவட்டம்
·         ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில்
·         சிவதட்சிணாமூர்த்தி - காசி விஸ்வநாதர் கோயில்,மதுரை பழங்காநத்தம் பஸ்ஸ்டாண்ட்
·         திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் -  சனகாதி முனிவர்களுக்கு பதில் பிரம்மா அமர்ந்த கோலம்
·         ஈசன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அன்னை உமையைத் தன் மடியில் தாங்கிய கோலம் - திருகன்னீஸ்வரர் கோயில்,திருக்கண்டலம்,சென்னை ரெட்ஹில்ஸ் - பெரியபாளையம் சாலை
·         பள்ளிகொண்டீஸ்வரர் -   தட்சிணாமூர்த்தி மனைவி தாராவுடன் , சுருட்டப்பள்ளி
·         சிவபுரி எனும் திருநெல்வாயை(திருக்கழிப்பாலை), சிதம்பரம்
·         திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில், ராஜ அலங்காரத்தில் சிம்மாசனத்தில் மனைவியுடன்
·         தாயுமான சுவாமி கோயில்,திருச்சி மலைக்கோட்டை(தர்ப்பாசனம்)
·         பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில்(கிழக்கு நோக்கி),திருப்புத்தூர்,சிவகங்கை மாவட்டம்
·         திருலோக்கி, திருப்பனந்தாள் (அஞ்சலி முத்திரை)
·         புஷ்பவனநாதர் திருக்கோயில்,(காl maaRRi vadivam), தென்திருபுவனம், திருநெல்வேலி
·         பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்,ஓமாப்புலியூர், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் (சேலை அணிந்து)
·         ஐயாறப்பன் கோயில்,திருவையாறு ( கபாலமும் சூலமும் ஏந்திய வடிவம்)
·         திடியன் மலை கைலாசநாதர் கோயில்,மதுரை -  பதினான்கு சித்தர்களுடன். நந்தியின் மீது அமர்ந்த கோலம்
·         ஆதிரத்தினேஸ்வரர் கோயில்,திருவாடனை - வீராசன கோலம்
·         நந்தியுடன் தெட்சிணாமூர்த்தி - மயிலாடுதுறை வள்ளலார் கோயில்
·         திரிசூலம் கோயில், சென்னை - வீராசன கோலம்
·         தியாகராஜர் கோயில் (வெளியில்), திருவொற்றியூர்
·         தக்கோலம் (சாந்த தட்சிணாமூர்த்தி)-  உத்கடி ஆசனம்
·         வீணாதர தட்சிணாமூர்த்தி கோலம் - நாகலாபுரம் வேதநாராயணர் கோயில், திருப்பூந்துருத்தி, நஞ்சன்கூடு, காஞ்சிபுரம் கைலாசநாதர், தூத்துக்குடி கழுகாசலமூர்த்தி கோயில்
·         கல்யாணசுந்த ரேஸ்வரர்,நல்லூர் , தஞ்சை பாபநாசம் - இரட்டை தட்சிணாமூர்த்தி
·         ஆத்மநாதசுவாமி கோயில்,சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வடதிசை  -  யோகநிலை
·         ஹேமாவதி, அனந்தப்பூர்,ஆந்திரா - யோக மூர்த்தி
·         சுகபுரம், கேரளா மாநிலம்


இதரக் குறிப்புகள்

நூல்கள்
ஞான சூத்திரம்,
ஞானச் சுருக்கம்,
ஞான பஞ்சாட்சரம்,
அகஸ்த்திய சகலாதிகாரம்,
சாரஸ்வதீயசித்ரகர்மமசாஸ்த்திரம்,
சில்பரத்தினம்,
சிரிதத்துவநிதி,
காரணாகமம்,
அம்சுமத்பேதாகமம்,
லிங்கபுராணம்
ஆதிசங்கரர் இயற்றியது தட்சிணாமூர்த்தி அஷ்டகம்.

பல திருவுருவங்கள்

ஞான தட்சிணாமூர்த்தி,
வியாக்யான தட்சிணாமூர்த்தி,
சக்தி தட்சிணாமூர்த்தி,
மேதா தட்சிணாமூர்த்தி,
யோக தட்சிணாமூர்த்தி,
வீர தட்சிணாமூர்த்தி,
லட்சுமி தட்சிணாமூர்த்தி,
ராஜ தட்சிணாமூர்த்தி,
பிரம்ம தட்சிணாமூர்த்தி,
சுத்த தட்சிணாமூர்த்தி

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
(திருவிளையாடற் புராணம் - பாடல் - 13)


புகைப்பட உதவி : விக்கிபீடியா