Wednesday, March 30, 2016

மகேசுவரமூர்த்தங்கள் 24/25 பைரவர்

ஸ்ரீ காலபைரவர் - காத்மாண்டு


புகைப்படம் : இணையம்

பெயர்க் காரணம்

பைரவர் என்னும் வட மொழி சொல் பீரு என்னும் சொல்லை அடிப்படையாக கொண்டது. இதற்கு அச்சம் என்பது பொருளாகும். எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை அண்டியவர்களைக் காப்பவர் என்பது பொருள்.

- (பரணம்) - உலக உயிர்களை தோற்றுவித்து  படைப்புத் தொழில் செய்பவர்
ர் - (ரமணம்) - தோன்றிய உயிர்களைக் காப்பவர்
- (வமணம்) - வலியுடன் வாழ்ந்து சலித்த உயிர்களை அழித்து தன்னுள் அடக்கிக் கொள்பவர்

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும் காலங்களுக்கு உட்பட்டே இயங்குகின்றன. அப்படிப்பட்ட காலத்தை இயக்கும் பரம்பொருளே பைரவர் ஆவார்.

பைரவர் சிவபெருமானின் இருபத்து ஐந்து மூர்த்தங்களில் / அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார்.

சில்ப சாஸ்திரப்படி 64 பைரவர்கள் வகைபடுத்தப்பட்டாலும், 8 பைரவர்கள் திசைக்கு ஒருவராக காவல் புரிகிறார்கள். அசிதாங்க பைரவர்,ருரு பைரவர்,சண்ட பைரவர்,குரோதன பைரவர்,உன்மத்த பைரவர்,கபால பைரவர்,பீஷண பைரவர், ஸம்ஹார பைரவர். இந்த எட்டு பைரவர்களே 64 திருமேனிகளாக விரிவடைகிறார்கள்.

வேறு பெயர்கள்

சிவபெருமானுடைய பஞ்ச குமாரர்களில் ஒருவரான பைரவருக்கு வைரவர், பிரம்மசிரேச்சிதர், உக்ர பைரவர், க்ஷேத்ரபாலகர், வடுகர், ஆபத்துதாரனர், சட்டைநாதர், கஞ்சுகன்,கரிமுக்தன், நிர்வாணி, சித்தன், கபாலி, வாதுகன், வயிரவன் என்று பல பெயர்கள் உண்டு.

கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும்(வடிவங்களுக்கு ஏற்றவாறு ஆயுதங்கள் மாறும்) நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர்

கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.

கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவரது அவதார தினமாகும்.

பைரவர் தோற்றம்

தோற்ற வகை : 1

அந்தகாசுரன் என்னும் அரக்கன் சிவனை வழிபட்டு இருள் என்ற சக்தியைப் பெற்று உலகை இருள் மயமாக்கி கர்வம் கொண்டு தேவர்களை துன்புறுத்தி வந்தான். அதனால் தேவர்களும், முனிவர்களும் சிவனிடம் முறையிட்டு அவனை அழிக்க வேண்டினார்கள். சிவன் தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக மாற்றினார். எனவே எட்டு சைகளிலும் எட்டு பைரவர்கள் தோன்றினார்கள்.

தோற்ற வகை : 2

ஒரு முறை ப்ரம்மா தனக்கு ஐந்து தலைகள் இருப்பதால் கர்வம் கொண்டு சிவனை நிந்தித்தார். சிவன் ருத்ரனிடம் ப்ரம்மாவின் ஐந்தாவது தலையை நீக்குமாறு கூறினார்இதனால் ப்ரமாவின் கர்வம் நீங்கியது. ப்ரம்மாவின் தலையை எடுத்ததால் பைரவருக்கு ப்ரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதனால் சிவன் பைரவரை பூலோகத்தில் சென்று யாசகம்(பிச்சை) எடுக்குமாறு கூறினார். இந்த தோஷம் திருவலஞ்சுழியில் அவருக்கு நீங்கியது.

பூசிக்க உகந்த மலர்கள்

தாமரை, செவ்வரளி, அரளி, வில்வம், தும்பைப்பூ, சந்தனம் செண்பகம், செம்பருத்தி, நாகலிங்கப்பூ,சம்மங்கி (மல்லிகை விலக்க வேண்டும்)

பிடித்த உணவுப் பொருட்கள்

சர்க்கரைப் பொங்கல், உப்பில்லாத தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயாசம், அவல் பாயாசம் நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால், செவ்வாழை மற்றும் பல பழவகைகள்

பைரவரை வழிபாடு செய்ய சிறந்த நாள்

எல்லா நாட்களுமே பைரவரை வழிபட சிறந்த நாள் என்றாலும் சில தினங்கள் உன்னதமான பலன்களைத் தரும். அதில் அம்மாவாசை, பௌர்ணமி(வெள்ளிக் கிழமையுடன் கூடிய பௌர்ணமி இன்னும் சிறப்பு), தேய்பிறை அஷ்டமி, ஞாயிறு ராகு காலம் ,

பைரவர் வழிபாட்டின் பலன்கள்

· ஏவல், பில்லி சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடையலாம்.
·   திருமணத்தடைகள் நீங்கும்
·   சந்தான பாக்கியம் பெறலாம் (குழந்தை)
·   இழந்த பொருள்களையும் சொத்துக்களையும் திரும்பப்பெறலாம்
·   இழந்த பொருள், சொத்தை மீண்டும் பெற்றிடலாம்.
·   ஏழரையாண்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, சனீசுவரனால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கும்
·   எதிரிகள் தொல்லை நீங்கும்
·   கிரங்களின் தோஷங்கள் மற்றும் பிதுர்தோஷம் நீங்கும்
·   வாழ்வில் வளம் பெருகும்
·   பிறவிப்பிணி அகலும்


இது சிறு குறிப்பு மட்டுமே. பைரவர் பற்றி விரிவாக அறிய திருவாடுதுறை மடத்து பதிப்பில் வெளியாகி இருக்கும் 'மகா பைரவர்' நூலினை வாசிக்கவும்.

Wednesday, March 16, 2016

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்



மாணவன்:

சாங்கிய மதத்தின் ஒரு பிரிவினர் 'உலகத்திற்கு முதல் காரணம் "பிரகிருதி"', அது தன்னைத்தானே தோற்றுவிக்கும் என்று கூறுகின்றனரே, அஃது எவ்வாறு?

ஆசிரியர்:

அறிவில்லாத பொருள் தானே செயல்படுவது இல்லை. எனவே உலகம்  செய்படுகிறது எனில் , அஃது அறிவு பெற்ற ஒரு கர்த்தாவினால் தான் நிகழ்த்தப்படுகிறது. எனவே அதை நடத்துபவன் பேரறிவும் பேராற்றலும் பெற்றவனாகவே இருக்க முடியும்.

மாணவன்:

அறிவு அற்றவைகளுக்கு செயல்பாடுகள் இல்லை எனில் எவ்வாறு காந்தம் இரும்பை ஈர்க்கிறது. நஞ்சு பற்றி இடம் இல்லாமல் எல்லா இடங்களுக்கும் பரவுகிறது.

ஆசிரியர்:

காந்தத்தையும், இருப்பையும் ஒருவன் கூட்டுவிக்கும் போதே அது ஈர்க்கப்படும். நஞ்சு பரவுதல் உயிர் உள்ள உடம்பின். எனவே அறிவில்லாத பொருள்கள் செயல்படா.

மாணவன்:

நீங்கள் குறிப்பிட்டது போல் உயிர்கள் அறிவுடைப் பொருள் எனில் அவைகள் உலகிற்கு கர்த்தாவாகுதல் என்பது சரியா?


ஆசிரியர்:

நிச்சயம் இல்லை. உயிர்கள் உடம்பை பெற்றபின்னரே முழுமை பெறும் தன்னை உடையதாகும். உடம்பு இல்லா உயிர்கள் மற்றொரு உடம்பை தோற்றுவிக்காது. எனவே பேரறிவு உடைய இறைவனே உலகிற்கு கர்த்தா.



Monday, March 14, 2016

மகேசுவரமூர்த்தங்கள் 23/25 ஏகபாதர்


வடிவம்(பொது)

·   உருவத்திருமேனி
·   வாமதேவ முகத்திலிருந்து  தோன்றியவர்
·   ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், பிரம்மா, விஷ்ணு என்ற ஐந்து மூர்த்திகளும் ஊழிக்கால பிரளயத்தில் ஒடுங்கி ஒரே உருவத்தில் காட்சியளிக்கும் மூர்த்தம்
·   வலது கை - அபய முத்திரை
·   இடது கை - வரத முத்திரை
·   பின்கைகளில் மான், மற்றும் ஆயுதம்
·   ஆடை - புலித்தோல்
·   கழுத்து - மணிமாலை
·   ஜடாபாரத்தில் சந்திரன் மற்றும் கங்கை

வேறு பெயர்கள்

·         ஒரு பாதன்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

·         திருக்காளத்தி - மலைப்பாறை புடை சிற்பங்கள்
·         திருவண்ணாமலை கோயில்
·         திருவொற்றியூர்

புகைப்படம் :  ta.wikipedia

(வேறு குறிப்புகள் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Thursday, March 10, 2016

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கழுகுன்றம்


தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருக்கழுகுன்றம்

மூலவர் -  சுயம்புலிங்க மூர்த்தி
ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய பாறைகளாக,அதர்வணவேத பாறை உச்சியில்  - சிவபெருமான் கோவில்
  க்ருத யுகத்தில் சாபம் பெற்ற சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகளும், த்ரேதா யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், வாப்ர யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், கலி யுகத்தில் சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் ழிபட்டுப் பேறு பெற்றது இத்தலம். இவர்கள் பிரம்மனின் மானச புத்திரர்கள்
கருவறை கஜப்பிரஷ்ட அமைப்பு
மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவித்த போது இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும் அதுமுதற்கொண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கிறது.
கோடி ருத்ரர்கள் தவம் செய்து முக்தி அடைந்த தலம்
சுந்தரர் ஈசனிடம் பொன் பெற்றத் தலம்
மாணிக்க வாசகருக்கு அருட்காட்சி கிடைக்கப்பெற்ற தலம்
சுரகுரு மன்னனுக்கு சுயம்புவாய் காட்சி
மலைக் கோவில் சுற்றி 12 தீர்த்தங்கள். இந்திர தீர்த்தம், சம்பு தீர்த்தம்,ருத்ர தீர்த்தம்,வசிஷ்ட தீர்த்தம், மெய்ஞான தீர்த்தம், அகத்திய தீர்த்தம், மார்கண்ட தீர்த்தம், கோசிக தீர்த்தம், நந்தி தீர்த்தம், வருண தீர்த்தம், அகலிகை தீர்த்தம், பட்சி தீர்த்தம்
பெயர்க்காரணம் - கழுகுகள் வழிபாடு -  கழுகாச்சலம், கோடி ருத்ரர்கள்  வழிபாடு  - உருத்திரக்கோடி, மகாவிஷ்ணு வழிபாடு  - வேதநாராயணபுரி, இந்திரன் வழிபாடு  -  இந்திரபுரி, இறைவன் மலை உச்சி - கொழுந்து வடிவம் - மலைக் கொழுந்து
சு‌ப்பையா சுவா‌மிக‌ள்(கடையனோடை சுவா‌மி, ‌பி.ஏ. சுவா‌மி, ‌திரு‌க்கழு‌க்கு‌ன்ற‌ம் சுவா‌‌மி ) முக்தி அடைந்த தலம்


தலம்
திருக்கழுகுன்றம்
பிற பெயர்கள்
வேதகிரி, வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம், கழுகாச்சலம், உருத்திரக்கோடி, வேதநாராயணபுரி, மலைக் கொழுந்து
இறைவன்
வேதகிரீஸ்வரர் (மலைமேல் இருப்பவர்), பக்தவத்சலேஸ்வரர் (தாழக்கோயிலில் இருப்பவர்)
இறைவி
சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை (மலைமேல் இருப்பவர்), திரிபுரசுந்தரி (தாழக்கோயிலில் இருப்பவர்)
தல விருட்சம்
வாழை
தீர்த்தம்
சங்கு தீர்த்தம்
விழாக்கள்
சித்திரை - தேர்த்திருவிழா, கார்த்திகை - சங்காபிஷேகம், குருபகவான் கன்னி லக்னத்தில் நுழையும் நாள் - லட்ச தீபம் ,சித்திரைத் திருவிழா, ஆடிப்பூரம், பௌர்ணமி
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
தாழக் கோவில்
காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
மலைக்கோவில்
காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை,
மாலை 4.30 மணி முதல் இரவு 6.30 மணி வரை

அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில்
திருக்கழுகுன்றம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN – 603109
044-27447139,27447393, 9894507959, 9443247394, 94428 11149
வழிபட்டவர்கள்
இந்திரன், மார்க்கண்டேயர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் - 1 பதிகம், திருநாவுக்கரசர் - 1 பதிகம், சுந்தரர் - 1 பதிகம், பட்டினத்தார், அருணகிரி நாதர்
நிர்வாகம்
இருப்பிடம்



இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 270  வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 28  வது தலம்.


மலைக்கோயில் மூலவர் - வேதபுரீஸ்வர்



மலைக்கோயில்  அம்மன் - சொக்க நாயகி


புகைப்படம் : தினமலர்

பாடியவர்          திருஞானசம்பந்தர்    
திருமுறை               1ம் திருமுறை      
பதிக எண்                103   
திருமுறை எண்     8  

பாடல்

ஆதல்செய்தா னரக்கர்தங்கோனை
யருவரையின்
நோதல்செய்தா னொடிவரையின்கண்
விரலூன்றிப்
பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ
டொருபாகம்
காதல்செய்தான் காதல்செய்கோயில்
கழுக்குன்றே.


பொருள்

அரக்கர்களின் தலைவனாகிய இராவணனை கயிலை மலையின் கீழ்ப்படுத்தி, நொடிப்பொழுதில் கால் விரலை ஊன்றி,  அவனுக்கு துன்பத்தை விளைவித்தவனும், பிறகு அவனுக்கு வரங்கள் வழங்கியவனும் பெண்மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காதல் செய்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.

கருத்து

நொடிவரை - நொடிப்பொழுது


பாடியவர்           சுந்தரர்       
திருமுறை             7ம் திருமுறை           
பதிக எண்             81       
திருமுறை எண்       8        


பாடல்

அந்தம் இல்லா அடியார் தம்மனத் தேஉற
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே
சந்தம் நாறும் புறவிற் றண்கழுக் குன்றமே

பொருள்

எண்ணிக்கை அற்ற அடியார்களது மனதில் அவரவர்க்கும் தகுந்தவாறு உறைபவனும், திருமாலும் நான்முகனும்  தினமும் வழிபடும் செய்யும் வண்ணம் இருப்பவனும், மலர்கள் நாள்தோறும் குவிந்து கிடக்கும் வண்ணமும் , நடனமாடுகின்ற சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம் , சந்தன மரம் மணம் வீசுகின்ற , முல்லை நிலத்தோடு கூடிய , குளிர்ந்த திருக் கழுக்குன்றமே

கருத்து
அந்தம் இல்லா அடியார்  - எண்ணிக்கை இல்லா அடியார்




Reference

1.வீரராகவப் புலவர் பாடியுள்ள தலபுராணம்

2.தருமை ஆதீன முதற் குருமணி திருஞானசம்பந்தர் அருளிய சிவபோக சாரம்

தில்லைவனம் காசி திருவாரூர் மாயூரம்
முல்லைவனம் கூடல் முதுகுன்றம் - நெல்களர்
காஞ்சிகழுக் குன்றமறைக் காடு அருணை காளத்தி
வாஞ்சியமென் முத்தி வரும்.


இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.