Friday, June 28, 2013

வெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது. ஏன்?

வெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது. ஏன்?

ஆன்மீகம் - பூதம் தூக்கிப் போய்விடும்(குழந்தைகளுக்காக).

அறிவியல் - புறச் சுழ்நிலைகளால் தரையின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். நம் உடல் வெப்ப நிலையோடு ஒப்பிடும்போது இது மிக அதிகம். இதனால் இரத்த ஓட்டம் தடைபடும் மற்றும் குன்றிவிடும். (உ.ம் - சூடான தோசைக் கல்லில் நீர் தெளித்தல்). இதனால் இரத்தம் மற்றும் வெப்பம் சம்மந்தமான வியாதிகள் வரும்.

(கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன் -  தலைவர்  சூப்பர் ஸ்டார்)

Photo : Internet

Thursday, June 27, 2013

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்

ஆன்மா குற்றங்கள் உடையது என்று கண்டோம்.

சுதந்திரமின்மை கொண்டது ஆன்மா. நினைத்தபடி ஒரு காரியத்தை முடியாமல் இருப்பதைக் கொண்டு இதை அறியலாம். 

பொருள் மீது ஆசை கொள்ளுதல் என்பது அதிருப்தியை உண்டாக்கும். பக்குவமற்ற ஆன்மாக்கள் இச்சை கொண்டு உழலுவதால் அது அதிருப்தி உடையது என அறியலாம்.

தன்னை அறிதல் இயற்கை. தன்னை அறியும் அறிவு இருந்தும் தன்னை அறியும் சக்தி இல்லாமையால் ஆன்மா செயற்கை உணர்வு உடையது.

பிறப்புகள் பலவகைப்படும்.தாவரம்,நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர் மற்றும் தேவர். (புல்லாகி புழுவாகி என்ற மணிவாசக் பெருமானின் வரிகள் நினைவு கூறத்தக்கவை. 

பஞ்ச பூதங்களின் வயப்பட்டு(பிருதிவி, அப்பு, தேயு,வாயு மற்றும் ஆகாயம்) ஆன்மா குற்றங்களை உடையது. எனவே குற்றமற்ற வேறு ஒன்று அதை இயக்க வேண்டும்.  அதன் பொருட்டே ஆன்மாக்களின் பிறப்பு.

Wednesday, June 26, 2013

சோம்பல் தவிர்

மஹாபாரதம் - சாந்தி பர்வத்தில் வரும் கதை - தற்கால வடிவங்களுடன்.

குட்டி -  அம்மா, ஒரு கத சொல்லேன்.

அம்மா - 'ஒரு ஊர்ல ஒரு ஒட்டகம் இருந்துச்சா'

குட்டி - 'ம்'

அம்மா - 'அது சாமிகிட்ட தவம் இருந்து ஒரு வரம் வாங்கிச்சாம்'

குட்டி - 'என்னான்னு'

அம்மா - 'நான் நகந்து போகாம சாப்பிடனும், அதுக்கு என் கழுத்து அவ்வ்வ்வ்வ்வ்வ்ளவு நீளமா வளரனும்'

குட்டி - 'அது எப்படி'

அம்மா - 'அது தான் கதயே. சாமியும் வரம் குடுத்துட்டாராம்'

குட்டி - 'ரொம்ப ஜாலி இல்ல'

அம்மா - 'கதய கேளு. அதுக்கு அப்புறம், அது ஒரு குகையில இருந்து நகராமலே எல்லா மரத்திலேருந்தும் எல்லா இலையையும் சாப்டுச்சாம்'.

குட்டி - 'ம்'

அம்மா - 'அதனால அது ரொம்ப குண்டாயிடுச்சாம்'

குட்டி - 'நம்ம ஆகாஷ் மாதிரி. ஹா ஹா'

அம்மா - 'அப்ப ஒரு பெரிய வெள்ளம் வந்துச்சாம். அதனால அதால நகர முடியலியாம்.

குட்டி - 'ம்'

அம்மா - 'அப்ப வெள்ளத்துல ஒரு நரி வந்துச்சாம். அதுக்கு ரொம்ம பசியாம். அது இந்த ஒட்டகத்தை   சாப்டுடுச்சாம்'

குட்டி - 'ஏன் ஒட்டகம் ஓடலையா'

அம்மா - 'சோம்பேறியா ஒரே இடத்துல இருந்ததால அதால ஓட முடியல. அதனால சோம்பேறியா இருக்கக்கூடாது. ஏய் எங்க ஒடற'

குட்டி - 'விளயாடப் போறேன். நீதான சொன்ன சோம்பேறியா இருக்கக்கூடாதுன்னு'


Tuesday, June 25, 2013

பெண் - இளமை துறத்தல்

காரைக்கால் அம்மையார்

இவர் காரைக்காலில் பிறந்தவர். இயற்பெயர் - புனிதவதி. வணிகர் மரபினை சார்ந்தவர்.

இளமை முதலே சிவ பக்தியில் சிறந்தவராக விளங்கினார். சிவ பத்தர்களை சிவனாகவே எண்ணி வணங்குவார்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரமதத்தன் என்பவருக்கு புனிதவதியை மணம் செய்து வைத்தார் அவர் தந்தையார்.

தந்தையாருக்கு புனிதவதியை கணவன் வீட்டிற்கு அனுப்ப மனம் இல்லை. எனவே காரைக்காலில் பரமதத்தன் தனது வியாபாரத்தை தொடர்ந்தார்.

பரமதத்தனை சந்திக்க வந்தவர்கள் அவனிடம் இரண்டு மாம்பழங்களை கொடுத்துச் சென்றனர்.(இதில் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. இவைகள் இரட்டை என்ற கருத்துக்கு வலிமை சேர்க்கின்றன.கணவன் - மனைவி, பரமாத்மா - ஜீவாத்மா)

பரமதத்தன்  வேறு ஆள் மூலமாக அந்தப் பழங்களை புனிதவதியிடம் கொடுத்து அனுப்பினான்.புனிதவதி மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்.

ஐந்தொழில் புரிவோன் நாடகத்திற்கு தயாரானார்.

அப்போது வாயிலில் குரல் கேட்டது. 'சிவாயா நம'

காரைக்கால் அம்மையார்,'திரு அமுது(சோறு) தயாராக இருக்கிறது. கறிஅமுது இன்னும் தயாராகவில்லை, சற்று பொருத்திருங்கள்'

சிவனடியார் - 'மிக்க பசியாக இருக்கிறது. இருப்பதைப் படையுங்கள்'.

எனவே அமுது படையல் பரமதத்தன்  அனுப்பிய ஒரு மாங்கனியோடு நிகழ்தது.

காத்திருங்கள்.. நாயகனின்  நாடகத்திற்கு..

Thursday, June 20, 2013

அக்னி

யயாதி என்றொரு மன்னன் இருந்தான். அவன் நகுஷனின் புத்திரன்.

அவன் மக்களின் சந்தோஷம் முதன்மையானது என்று ஆட்சி செய்தான்.அவனுக்கு 5 புதல்வர்கள்.

பல வருடங்கள் ஆட்சி செய்தப்பின் ரூபத்தை அழிப்பதும், மிக்க துன்பத்தை தரத்தக்கதுமான முதுமையை அடைந்தான்.

அவன் தனது புதல்வர்களை அழைத்து தான் இளமையோடு இருக்க விருப்புவதாக கூறினான். 

புதல்வர்கள் இதனால் 'தங்களுக்கு என்ன பயன்' என்று கேட்டார்கள்.

'எனது முதுமையை வாங்கிக் கொள்வர்கள் அரசாட்சி செய்யலாம்' என்றான்.
மகன்கள் விரும்பவில்லை.

பூரூ என்ற மகன் 'தான் முதுமையை ஏற்றுக் கொள்கிறேன்' என்றான்.

பல ஆண்டுகள் இளமையோடு இருந்து எல்லா சுகங்களையும் அனுபவித்தான். பல வருடங்களுக்குப் பின் அவனுக்கு ஞானம் வந்தது. 'காமம் விரும்பியவைகளை அனுபவிப்பதால் தீருவது இல்லை. அது அக்கினியில் இடப்பட்ட நெய் போல் ஜ்வலிக்கிறது. எத்தனை வகையான பொருள்களை அனுபவித்தாலும் அது ஒழிவை அடைவதில்லை.எந்த காலத்திலும் எப்பொழுதும் தீமை செய்யாமல் இருக்கிறானோ அப்போது அவன் ப்ரம்மம் ஆகிறான். எப்பொழுது விருப்பு வெறுப்பு அற்று இருக்கிறானோ அப்போது அவன் ப்ரம்மம் ஆகிறான்'.

மீண்டும் பிள்ளையிடம் இருந்து மூப்பினை வாங்கிக் கொள்கிறான்.

காமியார்த்தமாக சொன்னால் - பெரும்பாலான பிள்ளைகள் தந்தை சொல் பேச்சினை கேட்பதில்லை.

ஆத்மார்த்தமாக சொன்னால் - சுகம் அனுபவித்தல் முடிவில்லாதது. தன்னைத்தான் வெல்ல வேண்டும்.

Wednesday, June 19, 2013

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்

சைவ சித்தாந்தம் மிகப் பெரியது என்பதால் இனி இத்தொகுப்புகள் - 'சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்' என்ற தலைப்பில் வரும்.

ஆன்மாக்கள் நித்தியமனவைகளாக இருக்கின்றன. தேகம் அழிவதால் அது அநித்தியம். கர்ம வினைகளின் காரணமாக பல பிறப்புகள் எடுக்கும், ஆத்மா மாற்றம் மட்டுமே கொள்கிறது. அது அழிவதில்லை. பல பிறப்புகளுக்கு காரணமாக மட்டும் அமைகிறது.

காமம், குரோதம், லோப மோக மதம் மாற்சரியம் இவற்றின் காரணமாக (அக்காரணிகள்) ஆன்மா குற்றங்களை உடையாதாக இருக்கிறது.

காமம்: பற்றினால் உண்டாகும் பாசம்

குரோதம்: கோபம்

லோபம்: பேராசை

மதம்: மிகு கோபம்/வெறி பிடித்த நிலைமை.

மாத்ஸர்யம்: பொறாமை

மேற் கூரிய காரணங்களால் ஆன்மா, மலத்தால் சூழப்பட்டிருக்கிறது.

'செம்புல பெயல் நீர் போல்' என்பது வாசகமாகும். அது போல் ஆன்மா வினைகளின் காரணமாக அதன் வடிவம் பெறுகிறது. இது ஆன்மாவிற்கு இயற்கை உணர்வு இல்லை என்பதை உணர்த்துகிறது.

Tuesday, June 18, 2013

பெண் - இளமை துறத்தல்

நான் அறிந்த வரையில் (மிக மிக சிறிய அளவு) பக்தி இலக்கிய காலத்திலிருந்து தற்காலம் வரை இரண்டு பெண்கள் தனது இளமையை துறந்திருக்கிறார்கள்.  (பல ஆண்கள் விரும்பி இருக்கிறார்கள்.  உ.ம் யயாதி - புரு - மஹாபாரதம்)

1. ஔவையார்,
2. காரைக்கால் அம்மையார்.


இருவருக்குமே இளமையின் மீது ஏன் அந்த வெறுப்பு ஏற்பட்டது?

1.சமூகம்
2.பொருளாதாரம்
3.வீடு
4.இறைமை குறித்த சிந்தனைகள்
5.காரைக்கால் அம்மையாருக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்து வரும் திருநீல கண்ட நாயனார் முலமாக வெளிப்பட்ட /பதிவு செய்யப்பட்ட 'இளமை மீதூற இன்பத்துறையில் எளியன் ஆனார்' என்ற எண்ணங்களின் துறத்தலா?
6.துறக்கப்பட்ட விஷயத்தில் இருந்த வலிகள்/காயங்கள்/வடுக்கள்.
7.இலக்கு நோக்கிய பயணம்.

நோக்கம் இருவருக்கும் ஒன்றாகத்தான்  இருந்திருக்கிறது.

காரைக்கால் அம்மையார் - என் சிறுவயதில் சொல்லப்பட்ட கதை இது.  இந்த பிரமிப்பு மற்றும் வலிகள் இன்றும் தொடர்கிறது.

ஒரு சராசரி ஆண் எப்படி வாழ்க்கையை நடத்தினான்,  இறையருளால் 'அம்மா' என்று அழைக்கப்பட்ட பெண் எப்படி அடைய முடியா இலக்கை அடைந்தாள் என்பது மிக நீண்ட வரலாறு.

காலத்தினை கருத்தில் கொண்டு காரைக்கால் அம்மையார் சரிதத்தை எழுத இருக்கிறேன். தவறு இருப்பின் தெளியப் படுத்துங்கள்.

Photo - Shivam

Saturday, June 15, 2013

வளையல் காப்பு

வளையல் காப்பு அணிவிப்பது எதனால்?

ஆன்மீகம் - குலத்தை வளர்க்க வரும் குழந்தையை வரவேற்க தயாராகிறோம்.

அறிவியல் - குழந்தையின் வளர்ச்சி (உயிர்) 5ம் மாதத்தில் தொடங்குகிறது. அது முதல் தாயில் உணவினை உண்டு தாயின் எண்ணங்களை சுவாசிக்க துவங்குகிறது. (உ.ம் -  அபிமன்யு) அதிக வளையல்கள் சப்தம் எழுப்பக்கூடியவை. அவை தாயிக்கு சந்தோஷம் அளிக்கும். எனவே குழந்தை நல்ல மன வளர்ச்சியோடு பிறக்கும்.


Friday, June 14, 2013

மொட்டை அடித்தல்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொட்டை அடிப்பது எதற்கு?

ஆன்மீகம் - தலையான பொருள் முடி. எனவே அதைத் தருகிறோம்.

அறிவியல் - வெட்டப்படும் முடிகளே அதிகம் வளரும்.  வியர்வை மற்றும் அழுக்கு காரணமாக மயிர் கால்கள் இடையில் அழுக்கு சேரும். மொட்டை அடிக்கும் போது இதை பெரும்பாலும் கண்டிருக்கலாம். தொடர்ச்சியாக இதை நீக்குவதால் தலை சார்ந்த வியாதிகள் வரும் வாய்ப்பு குறையும்.

Wednesday, June 12, 2013

சைவ சித்தாந்தம்

உடம்பு அழியக்கூடியது. (தேகம்) - எனில் அதைப் பகுக்க முடியுமா?

ஜடப் பொருள்கள் அழியக்கூடியது.

பிருதிவி, அப்பு, தேயு, வாயு மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கை. எனவே இது அழியும்.  எனவே இவை ஜடப் பொருள்கள். எனவே அது சித்து ஆகாது.

அப்படி எனில் மனத்தின் வேலை எது -
கீழே குறிப்பிட்டவைகளின் தொடர்கலவையே செயல்.

மனம்  - நினைக்கும்.
புத்தி  - விசாரிக்கும்.
சித்தம்  - நிச்சயிக்கும்.
அகங்காரம் - துணியும்.

எனவே சித்தம் என்பது பூதங்களின் சேர்க்கை தவிர்த்த மற்றொன்று. சில நேரங்களில் கனவு காண்கிறோம். அவை நிச்சம் என்றும் நம்புகிறோம். விழித்தவுடன் அது கனவு என்பது பற்றிய தெளிவு வருகிறது.

அது போலவே 'நான்' தேகம் என்னும் நிலை மாறும் போது, அசித்து பற்றிய எண்ணம் தெளிவுறுகிறது. அது உலகியல் நிலையாமை என்னும் கருத்தை வலியுறுத்தி நிச்சயப்படுத்துகிறது.

கருத்து கனமானது என்பதால் மீண்டும் தொடர்வோம்.
(மிக அதிக அளவில் இக்கருத்துக்களை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக)

Tuesday, June 11, 2013

பட்டினத்தார்

பட்டினத்தார் என்ற பெயரில் பல புலவர்களும், கவிஞர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். காலம் 2ம் நூற்றாண்டு, 10ம் நூற்றாண்டு மற்றும் 17 - 18 ம் நூற்றாண்டு.

பட்டினத்தாருக்கு ஞானம் மகன் மூலமாக கிடைக்கிறது. கடல் கடந்து பொருள் ஈட்டி வரும் மகன், எருவிராட்டியையும், தவிட்டையும் எடுத்து வருகிறான். அவன் கொடுத்ததாக இருந்த பேழையை(பெட்டி) திறந்து பார்க்கிறார். ஒலை ஒன்றும், உடைந்த ஊசி ஒன்றும் இருக்கிறது. அந்த ஓலையில்  "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே"  என்று எழுதப்பட்டிருக்கிறது.

இடரது பாடல்கள் மிக எளிமையானவை.



பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே 

இவ்வுலகில் பிறக்கும் போது எதையும் எடுத்து வரவில்லை. அது போலவே இறக்கும் போதும். இடைக்காலத்தில் பெறும் இச்செல்வம் சிவன் கொடுத்தது என்று அறியாமல் இறக்கும் கீழ் தரமானவர்களுக்கு என்ன சொல்வேன்.

முதல் பட்டினத்தார் தவிர மற்ற இருவரின் பாடல்களுக்கு விளக்கம் தேவை இருக்காது.

வாசித்தால் வாழ்வின் நிலைமை புரியும்.

Image - Internet

Monday, June 10, 2013

சூடம் காட்டுதல்

குழந்தைக்கு சூடம் காட்டுவது ஏன்?

ஆன்மீகம் - திருட்டி கழியும்.

அறிவியல் - அறிவியல் வளர்ச்சி அடையாத காலம். அதனால் அதற்கான உபகரணங்கள் எதுவும் இல்லை அக்காலத்தில். சூடம் காட்டும் திசையினில் குழந்தையின் கண்கள் அசையும். அதனை வைத்து கண்களின் இயக்கத்தை அறிவார்கள் பெரியவர்கள்.

Sunday, June 9, 2013

கருடனின் பிறப்பு - 2

பிறக்கும் போதே மிக பலமுடன் பிறந்து, பலரை துவம்சம் செய்து கத்ரு முன் நிற்கிறார் கருடன்.

'என்ன வேண்டும்' - கத்ரு

'என் தாய் விடுதலை' - கருடன்
'அது இயலாது' - கத்ரு

'அது நிகழ என்ன செய்யவேண்டும்' - கருடன்

'தேவலோகத்திலிருந்து அமிர்தம் வேண்டும்' - கத்ரு

பல இன்னல்களுக்குப் பிறகு அமிர்தம் எடுத்து வருகிறார். தேவேந்திரனிடம் அமிர்த கலசத்தை மீண்டும் ஒப்படைப்பதாக உறுதி அளிக்கிறார்.

கத்ரு, 'அமிர்தம் கொண்டுவந்திருக்குறாயா'

கருடன், 'ஆம், கொண்டுவந்திருக்கிறேன். என் தாயை விடுதலை செய்யுங்கள், '

கத்ரு,' வினதையை விடுதலை செய்யுங்கள். அந்த அமிர்தத்தை கொடு'
கருடன்,'அமிர்தம் கொண்டுவரச் சொல்லிதான் உங்கள் உத்தரவு. உங்களிடம் கொடுக்க சொல்லி அல்ல' என்று கூறி அமிர்த கலசத்துடன் தேவேந்திரனை சந்திக்க புறப்படுகிறார்.

பெரிய திருவடி போற்றி,போற்றி

Saturday, June 8, 2013

தேடல்

தத்துவ சாஸ்திரத்தின் படி ஒரு பொருளை அடையாளம் காண (கடவுள் என்று கொள்வோம்)மூன்று வழிகள் உண்டு.(நாஸ்திக தர்சனம் - இங்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை)

1.அனுபவம்
2.அனுமானம்
3.ஆப்தவாக்கியம்.

1.அனுபவம் - தன்னால் தானே காண்பது. எனக்கு இதற்கு முன்பு நிகழ்ந்திருக்கிறது. அது போலவே இதற்கும் முடிவு எடுக்க வேண்டும். (நேற்று பூஜைக்கு வாங்கிய மலர்கள் அருமை. எனவே மீண்டும் அங்கேயே வாங்க வேண்டும்)

2.அனுமானம் - பெற்ற அனுபவம் கொண்டு (தான் மற்றும் பிறர்) முடிவெடுத்தல். (பூக்கடையில் நல்ல கூட்டம். வரலட்சுமி விரதம் வேறு. ரூ.50/- சொல்வான்)

3.ஆப்தவாக்கியம் - விவரம் அறிந்தவர்கள் சொல்வதை கேட்பது. (அங்க வாங்கு, நிச்சயம் விலை மலிவு)

தேடுதலைத் தொடர்வோம்..

Friday, June 7, 2013

தடுமாற்றம்

வெளியே புறப்படும் போது, தடுமாறினால் வீட்டிற்கு வந்து நீர் அருந்தி செல்வது எதனால்?

ஆன்மீகம் - போகும் காரியத்தில் தடங்கல் வரும்.

அறிவியல் - தடுமாற்றம் என்பது, தெளிவற்ற மனநிலையக் குறிக்கிறது. மன ஒருமை இன்மையே தடுமாற்றத்திற்கு காரணம். நீர் அருந்துதல் என்பது அமைதிப் படுத்துதல். சுவாசம் சீராகும். பதறாத காரியம் சிதறாது.

Thursday, June 6, 2013

கருடனின் பிறப்பு - 1

கருடனின் பிறப்பு (சிறிய வடிவில் - மூலம் - மகாபாரதம் - M. V. ராமானுஜாச்சாரியார்)
கத்ரு, வினதை இரு அரசிகள்.
கத்ரு - நாகங்களின் தாய்
வினதை - அருணன் மற்றும் கருடனின் தாய்.

ஒரு முறை வானில் வெள்ளைக் குதிரை பறந்து செல்கிறது.

அப்போது அதன் வால் கருப்பாக இருப்பதாக கத்ரு உரைக்கிறாள். வெள்ளையாக இருப்பதாக வினதை உரைக்கிறாள். யார் தோற்றாலும் ஒருவர் மற்றவருக்கு 1000 வருடம் அடிமையாக வேண்டும் என்று முடிவாகிறது.

அன்று இரவு கத்ரு தனது மகன்களான நாகங்களை அழைத்து, அவைகள் வாலில் தங்கும் படி கேட்டுக் கொள்கிறாள். அதனால் 'வால் கருப்பாக தெரியும் 'என்றும், 'நான் ஜெயித்து விடுவேன்' என்றும் உரைக்கிறாள். நாகங்கள் 'நீ தவறு செய்கிறாய்' என்று உரைக்கின்றன. அவள் கேட்கவில்லை. பின்பு அவைகள் ஒத்துக் கொள்கின்றன. போட்டியில் கத்ரு வெற்றி பெற்றதாக அறிவிக்கப் படுகிறது.

வினதை  அடிமையாகி விடுகிறாள்.

அப்பொழுது வினதை கருவுற்றிருந்தாள். அவளிடம் இரு முட்டை இருந்தது.
500 வருட காலம் காத்திருந்தும் எதுவும் நிகழவில்லை. ஒரு முட்டையை உடைத்து விடுகிறாள். அதிலிருந்து அருணன் வெளிவருகிறார். 'அவசரப் பட்டு உடைத்து விட்டாய் தாயே, இன்னும் ஒரு 500 வருட காலம் காத்திரு, மிகவும் பலசாலியாகவும், மிகவும் புத்திசாலியுமான ஒரு மகன் பிறப்பான்' என்று கூறி மறைந்துவிடுகிறார்.
பின்பு..
(தொடரும்)

Wednesday, June 5, 2013

சைவ சித்தாந்தம்

சைவ சித்தாந்தம் - சிந்தனை

பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் - என்று ஆரம்பிக்கிறது. பதி குறித்தே தொடக்கம் எனினும், 'பசு'(உயிர்) குறித்த அறிவு ஏற்பட்ட பின் 'பதி' குறித்த உணர்வு வரும் என்பது என் கருத்து.

எனவே பசு தொடங்கி விளக்கம் ஆய்வோம்.

பொதுவாக உயிர்களின் நிலையாமையைச் சொல்லி இறைவனை நாடச் சொல்லுதல் சைவ மரபு. (உ.ம் - திருமந்திரம் - உயிர் நிலையாமை, யாக்கை நிலையாமை )

நிலைத்திருத்தல் என்பது எல்லா காலங்களிலும் நிலைத்திருத்தல் (அழிவற்றதாக) என்பதாகக் குறிக்கப்படும்.
அவ்வாறு அல்லாது,
1. உடம்பு அழியக்கூடியது. (தேகம்)
2. பிரபஞ்சம் அழியக்கூடியது. (உ.ம் பிரளயம், ஊழிப் பெருங்காற்று)
3. பிரபஞ்சதின் உட் பொருட்களும் அழியக் கூடியது. (மரம், செடி)

அழியும் பொருள் ஒன்று எனில், அழியாப் பொருளும் இருக்கக் கூடும்.
எனவே அவைகள் அசித்து எனவும், சித்து எனவும் வழங்கப்படும்.
சித்து          - அழியாதது.
அ - சித்து  - அழியக் கூடியது.

கருத்து கனமானது என்பதால் மீண்டும் தொடர்வோம்.
(மிக அதிக அளவில் இக்கருத்துக்களை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக)

Tuesday, June 4, 2013

வடக்கில் தலை வைத்து உறங்குதல்

வாழ்வாங்கு வாழ்ந்தாலும் வடக்கில்  வைத்து உறங்குதல் கூடாது?

ஆன்மீகம் - கைலாச மலை வடக்கில் இருக்கிறது. அதனால் வடக்கில் தலை வைத்து உறங்கக் கூடாது.

அறிவியல் - உடல் முழுவதும்,  தலை முதல் கால் வரை ஒரு காந்த சக்தி எப்பொழுதும் எல்லோருக்கும் ஓடிக் கொண்டிருக்கும்.  தலையை வடக்காகவும், பாதங்களை தெற்காகவும் வைத்து அது இயங்குகிறது. வடக்கில் தலை வைத்து உறங்கும் போது, வட புலமும், வட புலமும் அருகினில் வரும். தொடர் உறக்கத்தின் காரணமாக தலைவலி மற்றும் அதிக மன நோய்கள் ஏற்படும்.

Image - Internet

Saturday, June 1, 2013

தங்க கொலுசுகள் அணிதல் கூடாது ஏன்?

தங்க கொலுசுகள் அணிதல் கூடாது ஏன்?

ஆன்மீகம்
மஹாலக்ஷ்மி சம்மந்தப்பட்டது. அதனால் தெய்வத்திற்கு மரியாதை தர வேண்டும்.

அறிவியல்
1. The Density for Gold is - 19.3 g. The electrical conductivity of silver at 293°K is 62.9e6 (1/Ωcm); the conductivity of gold is only 48.7e6 (1/Ωcm) (in both cases, e is being used as the ten's exponent). That means Silver is a better conductivity than Gold. 



2. புவி ஈர்ப்பு ஆற்றலுக்கு எதிராக செயல்பட தங்கத்திற்கு ஆற்றல் குறைவு. அது உடலில் மாறுதல்களை ஏற்படுத்தும்.

3. கீழே விழுந்தால் தெரியாது. பொருளாதார இழப்பு.


Image - Internet