Sunday, June 9, 2013

கருடனின் பிறப்பு - 2

பிறக்கும் போதே மிக பலமுடன் பிறந்து, பலரை துவம்சம் செய்து கத்ரு முன் நிற்கிறார் கருடன்.

'என்ன வேண்டும்' - கத்ரு

'என் தாய் விடுதலை' - கருடன்
'அது இயலாது' - கத்ரு

'அது நிகழ என்ன செய்யவேண்டும்' - கருடன்

'தேவலோகத்திலிருந்து அமிர்தம் வேண்டும்' - கத்ரு

பல இன்னல்களுக்குப் பிறகு அமிர்தம் எடுத்து வருகிறார். தேவேந்திரனிடம் அமிர்த கலசத்தை மீண்டும் ஒப்படைப்பதாக உறுதி அளிக்கிறார்.

கத்ரு, 'அமிர்தம் கொண்டுவந்திருக்குறாயா'

கருடன், 'ஆம், கொண்டுவந்திருக்கிறேன். என் தாயை விடுதலை செய்யுங்கள், '

கத்ரு,' வினதையை விடுதலை செய்யுங்கள். அந்த அமிர்தத்தை கொடு'
கருடன்,'அமிர்தம் கொண்டுவரச் சொல்லிதான் உங்கள் உத்தரவு. உங்களிடம் கொடுக்க சொல்லி அல்ல' என்று கூறி அமிர்த கலசத்துடன் தேவேந்திரனை சந்திக்க புறப்படுகிறார்.

பெரிய திருவடி போற்றி,போற்றி

No comments:

Post a Comment