Saturday, April 26, 2014

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்

வேதசிவாகமவியல்

பதியினது உபதேசம் பற்றி விளக்கும் வகையில் இருக்கும் உபதேசங்கள். இது உலகத்தின் இயல்புகளையும், ஆன்மாக்களையும் அது பற்றி நிற்கும் பாசத்தை பற்றியும் விளக்கும்பிறகு அப்பாச இயல்பில் இருந்து விலகுவதற்கான வழியையும் கூறும்.

இவைகள் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்று வகைப்படுத்தப்படுகிறது. (இவற்றிற்கான விளக்கங்களுக்கு நாம் செல்லவில்லை)


இவ்வேதங்கள் இரண்டு காண்டங்கள் உடையது. கர்ம காண்டம் மற்றும் ஞான காண்டம்.

இவற்றுள் கர்ம காண்டம்(செய்த வினையின் விளைவு) அவற்றை மாற்ற ஜோதிடம் போன்ற புண்ணிய கர்மங்களை அறிந்து சொர்க்கத்தை விரும்பி செய்யப்படுவது)


ஞான காண்டம் - உலகம், உடல், உயிர் போன்ற நிலையாமைத் தத்துவங்களை கண்டு, தன்பற்று நீங்கி முக்தி அடைதலுக்கு உரிய உண்மை ஞானத்தை உணர்த்துவது.

Monday, April 21, 2014

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்

இவ்வாறு அந்த ஈஸ்வரன் சர்வ சுதந்திரத்துடன் இருக்கிறார். இதனை விளக்குவோம்.

சுதந்திரம் என்பது தன்னாலும் பிறராலும் தனக்கும் தடை இல்லாமல் இருத்தல். சீவன்கள் கன்மானுபவம் கூடி அதை அனுபவிக்க உரியவர்கள். வரம்பிற்கு உட்பட்ட அறிவு தொழில் உடையவர்கள். இவ்வாறு அவர்களுக்கு விதிக்கப்பட்டவைகளை முடித்தும், அவைகளை கெடும்படியாக தடுத்தும் செய்வதால் தனக்கு மேல் கர்த்தா இல்லாமல் அவர் சுதந்த்ரத்துடன் செயல்படுகிறார்.




அவ்வாறு செயல்படும் ஆன்மாக்கள் தனது குற்றம் நீங்கி குணப்படுதல் நிகழும். இதனை விளக்குவோம்.

சித்துப் பொருளாகிய ஆன்மாக்கள் தனது குற்றத்தை தானே நீக்குதல் ஆகா. தனுக் கரணங்களைக் கொடுத்து ஈஸ்வரன் தனது குற்றங்களை உணர வைக்கிறான். இவ்வாறு சிவாகமங்களை அறியும் ஆன்மாக்கள் அதிலிருந்து குற்றம் விலகி சுகிக்கும்.


இத்துடன் சித்தியல் நிறைவு பெறுகிறது.

Thursday, April 17, 2014

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்





சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்













சர்வ வியாபகம் 

எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைவுற்று இருத்தல்.

எல்லா பொருள்களிலும் நீக்கமற  நிறைவுற்று இருத்தல் முதல் தன்மை. அதோடு தளைகளை அறிவிக்கவும் அதோடு ஆன்மாக்களை தளைகளில் இருந்து விடுவிக்கும் பொருளாகவும் இருத்தல். அஃது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்தது.

இதை உண்மை என்பதை பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட திருவிளையாடல் புராணம் உணர்த்தும்.

நித்யதத்துவம் 

அழிவில்லாது.

தனக்கான செயல்களை வினைகளில் வழியே கூட்ட பதி ஒன்று வேண்டும். அவ்வாறு செயவதற்கு தனக்கு மேல் ஒரு பதி இல்லாத பரம் பொருள்.

சுவையினை உணரும்  பசுக்கள் அவற்றின் தன்மைக்கு ஏற்ப அவற்றை அனுபவிப்பது போல், ஈஸ்வர அனுபவிப்பதை அனுபவிப்பதால் அவன் நித்ய  ஆனந்தராக இருத்தல் வேண்டும்.

Wednesday, April 16, 2014

சைவத் திருத்தலங்கள் 274 – திருவலிதாயம்


தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள்
·   சிவன் சுயம்பு மூர்த்தி
·   பாரத்துவாஜ முனிவர் கருங்குருவி (வலியன்) யாக வந்து வழிபட்ட தலம்
·   இராமன் வழிபட்டத் தலம்
·   மார்க்கண்டேய மகரிஷி உபதேசத்தின்படி வியாழன் தன் தவறு உணர்ந்து  சிவனை வணங்கி பாவன் நீங்கப் பெற்ற தலம்
·   பிரம்மாவின் பெண்கள் கமலியும், வல்லியும் இறைவனை பூஜித்து விநாயகரை மணம் புரிந்த தலம்

·   கஜ பிருஷ்ட விமானம்






தலம்
திருவலிதாயம்
பிற பெயர்கள்
பாடி
இறைவன்
வலிதாய நாதர், வல்லீஸ்வரர், திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார்
இறைவி
ஜகதாம்பாள், தாயம்மை,
தல விருட்சம்
பாதிரி, கொன்றை
தீர்த்தம்
பரத்துவாஜ தீர்த்தம்
விழாக்கள்
சித்திரை - பிரம்மோற்ஸவம், தை - கிருத்திகை, குரு பெயர்ச்சி
மாவட்டம்
சென்னை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில்,                         
பாடி, சென்னை - 600050.

+91-44 -2654 0706
பாடியவர்கள்
 திருஞானசம்மந்தர், அருணகிரியார்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத்துறை
இருப்பிடம்
சென்னை  'பாடி'க்கு அருகில். டி.வி.எஸ், லூகாஸ்' நிறுத்தத்தில் இருந்து மிக அருகில்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 254வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 21வது தலம்.

திருவல்லீஸ்வரர்



தாயம்மை



பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    1ம் திருமுறை 
பதிக எண்                    003
திருமுறை எண்               1


பாடல்

பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல்தூவி
ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு தேத்தவுயர்சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலிதாயம்
சித்தம்வைத்தவடி யாரவர்மேலடை யாமற்றிடர்நோயே.

பொருள்

பல சிவனடியார்களும் பொலிவுடன் விளங்கும் மலர்களை உள்ளங் கையினில் ஏந்தி, வார்த்தைகளால் மாறுபாடு இல்லாமல் மந்திரங்கள் சொல்லி, நீர் வார்த்து , ஊமத்தை மலர்களைச் சூடி பூஜிக்கிறார்கள்.  அவர்களை உயர் அடையச் செய்யும் பெருமான் உடன் உறையும் வலிதாயம் என்ற தலத்தை மனதில் வைத்த அடியவர்களை துன்பம் என்ற நோய் தாக்காது.

வலிதாயத்தை மனத்தால் நினைத்த அடியவர்களை துன்பம் தாக்காது என்பது துணியு.

கருத்து

பத்தர் - சிவன் அடியார்காள்
பொலியம்மலர்  - பொலிவுடன் விளங்கும் மலர்
புனல் தூவி  - நீர் இட்டு
பிரியாதுறை கின்ற - உமையம்மையை பிரியாதிருக்கும் சிவன்


பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    1ம் திருமுறை 
பதிக எண்                    003
திருமுறை எண்               8

பாடல்

கடலினஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநடமாடி
அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மான்அமர்கோயில்
மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலிதாயம்
உடலிலங்குமுயி ருள்ளளவுந்தொழ வுள்ளத்துயர்போமே.

பொருள்



திருபாற்கடலைக் கடந்த பொழுது எழுந்த நஞ்சினை உண்டு தேவர்கள் தொழுது ஏத்தும் படி செய்து நடனம் ஆடி, வலிமை மிக்க இலங்கை செருக்குடன் கூடிய ஆற்றலை அழித்து பின் அவனுக்கு அருள் புரிந்த இறைவன் உறையும் கோயில்களை உடையதும், தேன் சுவை போன்ற கமுகு மற்றும் பலா மரங்களை உடையதுமான வலிதாயம் என்ற இத்தலத்தை வணங்குபவர்களில் துயரானது உடலில் உயிர் வரை இருக்கும் துன்பம் என்ற நிலையை நீக்கும்.


Photo : Dinamalar

Friday, April 4, 2014

சைவத் திருத்தலங்கள் 274 – வடதிருமுல்லைவாயில்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள்

·   சிவன் சுயம்பு மூர்த்தி - தீண்டாத் திருமேனி
·   வாணன், ஒணன் எனும் அசுரர்களும் முனிவர்களிக்குமான மனக்கசப்புகள். முனிவர்களுக்காக தொண்டை மன்னன் போர். அதலால் தோல்வி. பட்டத்து யானை முல்லைக் கொடியில் மாட்டிக் கொள்ளுதல். அதன் பொருட்டு மன்னன் கொடிகளை நீக்குதல். அதனால் ரத்தம் வெளியேற்றம். தன் நிலை குறித்து வருந்தி மரணம் விரும்பி மரணிக்க எண்ணுதல். இறைவன் காட்சி
·   தலையில் வெட்டுப்பட்ட காயங்களுடன் காட்சி. ஆதலால் வருட முழுவதும் சந்தனக் காப்பு. சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் திருக்காப்பு நீக்கப் படும்
·   நந்தி அசுரர்களை அழிக்க மன்னனுடன் சென்றதால் சுவாமிக்கு எதிர் திசையில் உள்ளது.
·   அசுரர்கள் வைத்திருந்த வெள்ளெருக்கு மரங்கள் தூண்களாக
·   ப்ரமன் வழிபட்ட தலம்
·   கண்ணிழந்த சூரியன் நற்கதி அடைந்த இடம்
·   சந்திரன் (ஷயரோகம்) சாபம் நீங்கப் பெற்ற இடம்
·   27 நட்சத்திரங்கள் நற்கதி அடைந்த இடம்
·   வசிஷ்டர் காம தேனுவைப் பெற்ற இடம்
·   பிருகு முனிவர் தவம் செய்து ரத்தினங்களை மழையாகப் பெற்ற இடம்
·   துர்வாசர் கோபம் நீங்கிய இடம்
·   இந்திராணி பூசை செய்து இந்திரனை அடைந்த இடம்
·   ஐராவதம் துயர் நீங்கப் பெற்றத் தலம்
·   தேவமித்திரன் , சம்புதாசன் , சித்திரதன்மன் - இறைவனை அடைந்து முக்தி அடைந்த தலம்
·   சுந்தரர் கண்பார்வை இழந்த பின் முதலில் தரிசனம் செய்த தலம்.
·   நவக்கிர சன்னதி இல்லை
·   பௌர்ணமி தின வலம் வருதல் - மூன்று தேவியர்களில் ஒரு தேவி
·   லவ குசர்கள் வணங்கிய சிவன் - குசலபுரேஸ்வரர்
·   கஜ பிருஷ்ட விமானம்

தலம்
வடதிருமுல்லைவாயில்
பிற பெயர்கள்
திருமுல்லைவாயில், மணிநகர்
இறைவன்
மாசிலாமணீஸ்வரர், நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர்,
இறைவி
கொடியிடை நாயகி
தல விருட்சம்
முல்லை
தீர்த்தம்
அக்னி தீர்த்தம், கல்யாண தீர்த்தம், சுப்ரமண்ய தீர்த்தம், மானத தீர்த்தம், குகனருந்தடம், அயிராவத தீர்த்தம், இஷ்டசித்தி தீர்த்தம், மங்கல தீர்த்தம், அரதனத் தீர்தம், சிவஞான தீர்த்தம், பிரம தீர்த்தம் - தீர்த்தம் ஒன்று, பெயர்கள் பல.
விழாக்கள்
வைகாசி பிரம்மோற்ஸவம்,
மாசித்தெப்ப விழா,
ஆனியில் வசந்த உற்சவம்
மாவட்டம்
செங்கல்பட்டு
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்,                       வட திருமுல்லைவாயில், சென்னை - 609113.
+91-44- 2637 6151

பாடியவர்கள்
சுந்தரர், அருணகிரிநாதர், வள்ளலார், மாதவச் சிவஞானயோகிகள், இரட்டைப் புலவர்கள்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத்துறை
இருப்பிடம்
சென்னையில் இருந்து 26 கி.மீ தூரம்.
சென்ட்ரலில் இருந்து மின்சார ரெயிலில் ஆவடி சென்று அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்.
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 255வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 22வது தலம்.

கொடியிடை நாயகி உடனாகிய மாசிலாமணீஸ்வரர்



பாடியவர்                     சுந்தரர்      
திருமுறை                    7ம் திருமுறை 
பதிக எண்                    69
திருமுறை எண்               1

பாடல்

திருவும் மெய்ப் பொருளும் செல்வமும், எனக்கு உன் சீர் உடைக் கழல்கள் என்று எண்ணி,
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும், ஊடியும், உறைப்பனாய்த் திரிவேன்;
முருகு அமர் சோலை சூழ் திரு முல்லை-வாயிலாய்! வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .

பொருள்

தேன் பொருந்திய சோலைகளால் சூழப்படிருக்கும் திரு முல்லை வாயிலில் உறைபவனே, பாசுபதா அஸ்திரம் உடையவனே, பரம் சுடரே,  வீடு பேறு, அதற்கு காரணமான மெய் பொருள், செல்வம் இவைகள் அனைத்தும் உனது திருவடியினால் அமையப் பெற்றவை என்று எண்னம் கொண்டு யாரையும் துணையாகக் கொள்ளாமல், அவர்களை விலக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு உன்னை வாயால் பாடும் அடிவனாகிய நான் படும் துயரத்தினை நீ களைவாயாக.

கருத்து

·   அனைத்தும் இறைவனால் அமையப் பெற்றன என்பதில் முடிவான எண்ணம் உடையவர் .
·   ஒருவரை மதியாது - மற்றவர்கள் இவற்றை ஒத்துக் கொள்ளாததால் அவர்களை மதியாது
·   படு துயர் - வினைத் தொகை. (எல்லாக் காலங்களுக்கும் பொதுவானதால் - துயரம் எல்லாக் காலங்களுக்கும் பொதுவானது)

பாடியவர்                 சுந்தரர்        
திருமுறை                7ம் திருமுறை
பதிக எண்                 69        
திருமுறை எண்           8 

பாடல்

நம்பனே! அன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட
சம்புவே! உம்பரார் தொழுது ஏத்தும் தடங்கடல் நஞ்சு உண்ட கண்டா!
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லை வாயில்-தேடி, யான் திரிதர்வேன், கண்ட
பைம்பொனே! அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .

பொருள்

ஆணில் சிறந்தவனே(சிவன்), சிறந்த பொன் போன்றவனே, அன்றைக்கு என்னை திருவெண்ணை நல்லூரில் நாய் போன்ற என்னை ஆட் கொண்ட சம்புவே, வானத்தில் உறைபவர் வணங்கி துதிக்கும் பெரிய கடலில் உண்டான நஞ்சினை உண்ட கண்டத்தை உடையவனே, செம் பொன்னால் ஆன மாளிகையால் சூழப்பட்டிருக்கும் திருமுல்லைவாயில் நான் தேடி திரிகின்றேன். இவ்வாறு திரிவதால் ஏற்படும் துன்பத்தைக் களைவாயாக.

கருத்து

நம்பன் - ஆணில் சிறந்தவன், சிவன்
பைம்பொன் - பண்புத் தொகை(பசுமை+பொன்) 

Image courtesy: Internet