Tuesday, January 31, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - தூகுதல்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  தூகுதல்

வார்த்தைதூகுதல்
பொருள்

·         குப்பைமுதலியவற்றைக்கூட்டித்தள்ளுதல்
·         திருவலகிடுதல்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
ஆமாறு உன் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன்
பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்
கோமான் நின் திருக்கோயில் *தூகேன்* மெழுகேன் கூத்தாடேன்
சாமாறே விரைக்கின்றேன் சதுராலே சார்வானே.

திருவாசகம் - மணிவாசகர்

உன் திருவடிக்கே ஆகுமாறு என் அகம் (மனம்) குழைய மாட்டேன்; அன்பால் உருக மாட்டேன்; பூ மாலை புனைந்து உன்னைப்பற்றி  உயர்வாக சொல்ல மாட்டேன்; உன்னை புகழ்ந்து உரைக்க மாட்டேன்; ஏழு உலகங்களுக்கும் அரசனே, உன்னுடைய கோவிலை பெருக்கி சுத்தம் செய்ய மாட்டேன்; நீர் விட்டு கழுவ மாட்டேன்; உன் கருணையை நினைத்து கூத்தாட மாட்டேன்; இதை எல்லாம் விட்டுவிட்டு சாவதற்காக விரைகின்றேன். உன் பெருங்கருணையால் என் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும்


இவை அனைத்தும் இறையிடம் நம்மைக் கொண்டு செல்பவை. ஆனால் இவைகளை எல்லாம் விடுத்து உன் திருவடை அடைய விரும்புகிறேன் என்பதில் இருந்து விரைவாக உன் திருவடி அடைய விரும்புகிறேன் என்பதும் இதை நீ நிறைவேற்றித் தர வேண்டும் என்பதும்உட் பொருளாக விளங்கும்.

No comments:

Post a Comment