Tuesday, January 31, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - சமரம்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  சமரம்

வார்த்தைசமரம்
பொருள்

·         யுத்தம்
·         போர்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
அமரும் பதிகேள் அகமாம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப்பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
*சமரம்* பொரு தானவ நாசகனே.

கந்தர் அனுபூதி


குமாரப்பெருமானே! பிரம்ம தேவரால் ஆணையிடப்பட்டு, அடியேன் (மாயைக்கு உட்பட்டு) விரும்பி ஒன்றாய் வாழும் உறவினர்கள், ஆன்மா ஆகியவற்றை விலக்கி அடியேனின் மயக்கம் கெடுமாறு உண்மைப் பொருளைப் போதித்தவரே! என்றென்றும் குமரனாகவும் இமய மலையரசனின் குமாரி பார்வதிதேவியின் மைந்தனாகவும் இருந்துகொண்டு, போர்க்களத்தில் போரிடும் சூரபன்மன் முதலிய அசுரர்களை அழித்த பெருமானே!.

No comments:

Post a Comment