Sunday, February 5, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - அறைதல்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  அறைதல்

வார்த்தைஅறைதல்
பொருள்

·         அடித்தல்
·         பறைமுதலியன கொட்டுதல்
·         கடாவுதல்
·         சொல்லுதல்
·         துண்டித்தல்
·         மண்ணெறிந்து கட்டுதல்
·         ஒலித்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
வஞ்சகர் விட்ட சினப்போர்
மதவெங் களிற்றினை நோக்கிச்
செஞ்சடை நீள்முடிக் கூத்தர்
தேவர்க்குந் தேவர் பிரானார்
வெஞ்சுடர் மூவிலைச் சூல
வீரட்டர் தம்அடி யோம்நாம்
அஞ்சுவ தில்லைஎன் றென்றே
அருந்தமிழ் பாடி *அறைந்தார்*.

12ம் திருமுறை - சேக்கிழார்


வஞ்சனையுடைய சமணர்கள் விடுத்த, மதமும் சினமும் உடைய யானையை நோக்கிச், `சிவந்த சடை பொருந்திய நீண்ட முடியையுடைய கூத்தரும், தேவர்க்கெல்லாம் தேவரும், வெண்மையான ஒளிபொருந்திய மூவிலைகளையுடைய சூலத்தை ஏந்தியவருமான திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் பெரு மானின் அடியவர் யாம்! அதனால் அஞ்ச வருவது ஏதும் இல்லை.` என்று பாடினார்.

No comments:

Post a Comment