ஓவியம் : இணையம்
'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' – முற்கு
வார்த்தை : முற்கு
பொருள்
·
எழுத இயலா ஒலி
·
நாவாற்கொட்டும்ஒலி.
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
காங்கிசை மிக்கம றக்கொடி வெற்றியில்
வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய
கான்கனி *முற்கியல்* கற்பக மைக்கரி ...... யிளையோனே
திருப்புகழ் - அருணகிரிநாதர்
விருப்பம் வைத்த வேட்டுவப் பெண்ணை (அச்சுறுத்தி) வெற்றி பெற்று, மா, பலா, வாழை என்னும் மூன்று வகைப் பழங்களையும், சர்க்கரையையும் வாரி உண்பவரும், காட்டில் கன்னியாகிய வள்ளியின் முன்னர் வந்தவரும், வேண்டுவோர்க்கு வேண்டியதை அளிக்கும் கற்பக மரம் போன்றவரும், கரு நிறம் கொண்ட யானை முகத்தவருமான விநாயகருக்குத் தம்பியே,
துக்கடா
உயிர் மெய்யெழுத்துக்களில் ஓசை வடிவங்கள்
வல்லினம் - வன்மையாக ஒலிக்கவும், மேல் தாடையின் முற்பகுதியில் ஒட்டி உறவாடி பிறக்கும் ஓசை. (க, ச, ட, த, ப, ற)
மெல்லினம் - மிகவும் மென்மையான ஓசையுடன், மேல் தாடையின் அடிப்பகுதியில் இருந்து உறவாடிப் பிறக்கும் ஓசை( ஞ, ங, ந, ண, ம, ன)
இடையினம் - வன்மையும் அன்றி, மென்மையும் அன்றி மேல் தாடையின் நடுப்பகுதியில் இருந்து உறவாடி பிறக்கும் ஓசை. (ய, ர, ல, வ, ழ, ள)
No comments:
Post a Comment