Monday, August 18, 2014

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்


சிவாகமம் என்பது என்ன?
ஆன்மாக்களுக்கு (மும்) மல நாசம் செய்து சிவஞானம் புகட்டி மோஷத்தை கொடுத்தல். இது பதியாகிய இறைவனிடத்தில் இருந்து வந்த கட்டளை.


சிவாகம எதனை உணர்த்தும்?
பதி, பசு மற்றும் பாசங்களின் இலக்கணத்தையும், சரியை, கிரியை, யோகம்  ஞானம்  ஆகியவற்றின் முறைமையையும், சாலோக, சாமிப, சாரூப, சாயுச்சியம்(முக்தி நிலையின் பல்வேறு நிலைகள்) ஆகிய சதுர் மூர்த்திகளையும் தெளிவாக உணர்த்தும்.

சிவாகமங்கள் எவை எவை?
சிவனின் ஐந்து திரு முகங்களில் இருந்தும் தோன்றியவையே சிவாகமங்கள். (சிவ பேதம் - 10 ஆகமங்கள், ருத்ர பேதம் - 18 ஆகமங்கள்)

காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம், தீப்தம், சூக்ஷ்மம், சகஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம், விஜயம், நிச்வாசம், ஸ்வாயம்பு, அநலம் ( ஆக்னேயம் ), வீரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகபிம்பம், புரோக்கீதம், லளிதம், ஸித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேச்வரம், கிரணம், வாதுளம்.

சரியை, கிரியை, யோகம், ஞானம் – விளக்கம்



வழிபாடு முறை
நிலை

யோக உறுப்புக்கள்
வழிபட்டவர்கள்
சரியை
உடல் தொண்டு
பூசைப் பொருட்களைத் திரட்டல்
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்
திருநாவுக்கரசர்
கிரியை
ஒரு மூர்த்தியை வழிபடல்
புறப் பூசை
பிரத்தியாகாரம், தாரணை
திருஞானசம்பந்தர்
யோகம்
வழிபடும் மூர்த்தியை த்யானித்தல்
அகப் பூசை
தியானம்
சுந்தரர்
ஞானம்
அனுபவம்
அனுபவம்
சமாதி
மாணிக்கவாசகர்

* விளக்கம் முழுமை பெறவே வழிபட்டவர்கள் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

2 comments:

  1. It is difficult to update such information. Nice.

    ReplyDelete
  2. Thanks a lot Suresh Kumar. Please read all articles and give feedback/suggestions.

    ReplyDelete