Sunday, May 11, 2014

சைவத் திருத்தலங்கள் 274 – திருவாலங்காடு

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள்

·   சிவன் சுயம்பு மூர்த்தி
·   பஞ்ச சபைகளில் ரத்ன சபை
·   இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார், தனது திருவடிகளால் நடந்து நடராஜர் திருவடியில் இருக்கும் இடம்.(பேய் வடிவம் கொண்டு இருக்கும் இடம்)
·   51 சக்தி பீடங்களில் காளி சக்தி பீடம்
·   முன்காலத்தில் இங்கு இருந்த ஆலமரக் காட்டில் சிவன் சுயம்பாக தோன்றி நடனம் புரிந்தததால் வடாரண்யேஸ்வரர்
·   காரைக்கால் அம்மையாரால் மூத்த திருப்பதிகம் பாடப் பெற்ற இடம்
·   கமலத் தேர் அமைப்பு
·   சிவனும் காளியும் ஊர்த்துவ தாண்டவம் ஆடிய இடம்
·   விமானம் செப்புத் தகட்டால் செய்யப்பட்டுள்ளது.

·   வேளாளர்கள் பழையனூர் நீலிக்குக்கொடுத்த வாக்குப்படி உயிர் கொடுத்து, உண்மையை நிலை நாட்டிய இடம்.

  
தலம்
திருவாலங்காடு
பிற பெயர்கள்
வடாரணியம், பழையனூர் ஆலங்காடு
இறைவன்
வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான், ஆலங்காட்டுஅப்பர்
இறைவி
வண்டார்குழலி, மகாகாளி
தல விருட்சம்
பலா
தீர்த்தம்
சென்றாடு தீர்த்தம்முக்தி தீர்த்தம்.
விழாக்கள்
மார்கழி - திருவாதிரை
மாவட்டம்
திருவள்ளுர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

அருள்மிகு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு-631 210,
திருவள்ளூர் மாவட்டம். 044 - 27872443
பாடியவர்கள்
மூவர் முதலிகளான திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர்,அருணகிரி நாதர், கச்சியப்ப சிவாச்சாரியார், இராமலிங்க அடிகள்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத்துறை
இருப்பிடம்
சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் உள்ளது
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 248வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   15 வது தலம்.
வழிபட்டவர்கள் -  கார்க்கோடகன், சுநந்த முனிவர்

வடாரண்யேஸ்வரர்


வண்டார்குழலி


பாடியவர்                     திருநாவுக்கரசர்
திருமுறை                    6ம் திருமுறை 
பதிக எண்                    78
திருமுறை எண்               10

பாடல்

மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே
    வண்கயிலை மாமலையை வந்தி யாத
நீலக் கடல்சூ ழிலங்கைக் கோனை
    நெரிய விரலா லடர்த்தார் தாமே
பாலொத்த மேனி நிறத்தார் தாமே
    பழனை பதியா வுடையார் தாமே
சீலத்தா ரேத்துந் திறத்தார் தாமே
    திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

பொருள்

திருவாலங்காட்டுடை சிவன் எப்படிப்பட்டவர் என்றால் மாலைக்காலத்து சந்திரனை அணிந்தவர், வளம் மிக்க கயிலையை வணங்காதவனும், நீல நிற கடலால் சூழப்பட்ட இலங்கையின் வேந்தனாகிய இராவணனை தனது பெரு விரலால் அழுத்தி துன்பம் அடையச் செய்தவர், வெண்மையான நிறமுடையவர், பழையனுரை தனது உறைவிடமாகக் கொண்டவர், உயர்ந்த ஒழுக்கங்களை உடையவர் போற்றும் திறமுடையவர்.



பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7ம் திருமுறை 
பதிக எண்                    52
திருமுறை எண்               2
பண்                          பழம்பஞ்சுரம்

பாடல்

பொய்யே செய்து புறம்புறமே திரிவேன் றன்னைப் போகாமே     7.52.2
மெய்யே வந்திங் கெனையாண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே    
பையா டரவம் அரைக்கசைத்த பரமா பழைய னூர்மேய  
ஐயா ஆலங் காடாஉன் அடியார்க் கடியேன் ஆவேனே.

பொருள்

மனம், வாக்கு மற்றும் காயங்களால் அவற்றுக்கு பொருந்தாத செயல்களைச் செய்து, உன்னிடத்தில் நிலைபெறும் எண்ணங்களைப் பெறாமல் திரிபவனாகிய என்னை, அவ்வாறு போகவிடாமல் தடுத்து என்னை ஆண்ட மெய்பொருளே, உண்மை நிலையினை உணர்ந்தரால் அறியப்பட்ட மெய்ப்பொருளே, ஆடும் நாகத்தினை இடையினில் அணிந்து பழையனுரில் உறைபவனே, திருவாலங்காட்டில் உறைபவனே, அடியேன் என்றும் உன் அடியவர்க்கு அடியவன் ஆவேன்.

கருத்து

பொய் பேசுதல் என்பது தாண்டி பொய்யே செய்து என்பதால் மனம், வாக்கு மற்றும் காயங்களால்
போகாமே என்பதால் தடுத்து நிறுத்தப்பட்ட

புகைப்படம் உதவி - தினமலர்

No comments:

Post a Comment