Sunday, March 30, 2014

ராமன் - என்றும் தொடரும் நிகழ்வுகள்

இது ராமனை பற்றிய ஒரு சில நிகழ்வுகளும் நினைவுகளும் -  ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு.

இந்த நிகழ்வினை எப்போது நினைத்தாலும் என்னையும் அறியாமல் இதயம் கலங்குகிறது.

சத்யமான தெய்வம், நீல வர்ணத்திகே சொந்தமானவன் ராமன் தன் நிலை மறக்கிறான். அம்பினை எடுத்து கடல் அரசனை சந்திக்க தயாராகிறான்.  (நான் அறிந்த வரையில் இதுவே ராமன் காட்டிய கோபம்)

கடல் அரசன் எதிரில் வந்து மன்னிப்பு கோருகிறான்.

அம்பினை எடுத்த ராமன் அதை தரையில் விடுகிறான்.

கடல் அரசனுடன் பேச்சு வார்த்தை முடிகிறது.

ராமன் திரும்புகிறான். அம்பு ஒரு மண்டுகத்தில் மேல் அம்பு செருகப்பட்டிருக்கிறது.

ராமன் கதறுகிறான் மனம் பதறுகிறது.
'ஏன் கத்தவில்லை, உரைக்க வில்லைராமன்.

'பிறப்பிலும் இறப்பிலும் உரைத்தல் உன் நாமம், ஆனால் நீயே என் மேல் அம்பு வைக்கும் போது நான் யாரிடம் போய் சொல்வேன்'. தவறு செய்தாலும் அது குறித்து வருந்துதல் ராமனுக்கு மட்டுமே உரித்தானது.

உருகுகிறான் ராமன். 'உன் ஜென்மம் தீர்ந்தது. நீ மகரிஷியாக வருவாய், எம்மை பற்றி நிற்பாய்'.


இவரே மண்டுக மகரிஷியாக பிறந்து சுந்தர் ராஜ பெருமானிடம் சேர்ந்தவர்(மதுரை - கள்ளழகர் கோயில்)

No comments:

Post a Comment