Monday, February 24, 2014

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் - 6



முருகன் குறித்த பொருள் பேசப்படும் போது எழும் காட்சி குறித்தவை இவ்விரண்டு பாடல்களும்















1.
விளக்கம்

கிரௌஞ்சமலையை பிளந்தவன்
அவுணர்கள் தலை அற்றவனாக செய்தவன்
கடல் வற்றச் செய்தவன்
ஐந்து பூதங்களையும் நீக்கச் செய்து
உரை அற்று உணர்வு அற்று - சொற்கள் அற்று, உணர உணர்வுகள் அற்று
உடலற்று உயிரற்று - உடல் நீக்கி, உயிர் அற்று
உபாயம் அற்று -
கரையற்று -
இருளற்று - நீக்கமற நிறைந்திருக்கும் ஒளி
எனதற்று - மும்மலத்தில் முக்கியமானதான கர்வத்தால் உண்டாகும் 'தான்' என்னும் அகங்காரம்.


பாடல்

வரையற் றவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற
புரையற்ற வேலவன் போதித் தவா, பஞ்ச பூதமுமற்
றுரையற் றுவர்வற் றுடலற் றுயிரற் றுபாயமற்றுக்
கரையற் றிருளற் றெனதற் றிருக்குமக் காட்சியதே. 61


பொருள்

சமாதி நிலையின் காட்சிகளும் அதற்கு முருகன் எவ்வாறு உதவினான் என்பதும் இங்கு விளக்கப்பட்டுள்ளது.

கருத்து

கிரௌஞ்சமலையை பிளந்தவனும், அவுணர்கள் தலை அற்றவனாக செய்தவனும், கடல் வற்றச் செய்தவனுமான முருகன் எனக்கு போதனை செய்தருளினான். இதனால் பஞ்ச பூதங்களில் செய்கைகள்(சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்ஒசை) நீங்கப் பெற்றன.அஃதாவது புறக்கருவிகள் செயல்கள் நீங்கப் பெற்றன. புறக்கருவிகளில் செயல்பாடுகள் நீங்கும் போது உணர்வு நீங்கப் பெற்றும், உடல் நீங்கப் பெற்றும், முக்தி என்கிற நிலையும் அழிந்து, கரைகாணமுடியாதும், மிக ஓளி பொருந்திய அக்காட்சியை அவன் எனக்கு அருளினான்.

2
விளக்கம்
துருத்தி - காற்றை உட்செலுத்த பயன்படும் கருவி

.
பாடல்

துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்
தருத்தி யுடம்பை யொறுக்கிலென் னாஞ்சிவ யோக மென்னுங்
குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன்சொன்ன
கருத்தை மனத்தி லிருந்துங்கண் டீர்முத்தி கைகண்டதே. 71

பொருள்

கடினமான யோக மார்கங்களால் அடையப் படும் முக்தி நிலையையும், அதற்கு மாற்றாக எளிதான வழியில் அடையும் எளிய வழியும் இப் பாடலில் குறிப்பிடப்படுகிறது.

கருத்து

துருத்தி என்ற கருவி போன்று காற்றை உட் செலுத்தி, கும்பகம் செய்து(காற்றை உள்ளே நிறுத்துதல் - பூரக கும்பம் மற்றும் ரேசக கும்பம்) உட் செல்லும் பிராண வாயுவை முறித்து, அதை உணவாக கொண்டு முக்தி அடைதலை எதற்காக செய்ய வேண்டும். ஆறு திரு முகங்களை உடைய குருநாதன் சொன்ன சொல்லின் உட் கருத்தை மனதில் பதிய வைப்பவர்கள் முக்தி அடைவார்கள்.


இத்துடல் முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் பகுதிகள் நிறைவு பெருகின்றன.

Friday, February 21, 2014

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் - 5





முருகன் குறித்த பொருள் பேசப்படும் போது எழும் தத்துவம் குறித்தவை இவ்விரண்டு பாடல்களும்

















பாடல்

போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும்
வாக்கும் வடிவும் முடிவும் இல்லாதது ஒன்று வந்துவந்து
தாக்கும் மனோலயம்தானே தரும் எனைத் தன் வசத்தே
ஆக்கும் அறுமுகவா சொல்ல ஒணாது இந்த ஆனந்தமே. – 73

பொருள்

ஆறு திருமுகங்களை உடைய திருமுருகனே, போதல், வருதல், இரவு, பகல், புறம், உள், வாக்கு, வடிவம், இறுதி ஆகிய எதும் இல்லா ஒன்று(ப்ரம்மம்) என்னிடம் வந்து வந்து என்னைச் சேர்ந்து, மனோ லயம் தானே தந்து என்னை தன் வசத்தே ஆக்குகிறது. இப்படிப்பட்ட ஆனந்தத்தை விவரிக்க இயலாது.

கருத்து

·         மனிதன் முதலிய பிறவிகளுக்கே இருமைகள் உண்டு. இருமைகள் இல்லாதவன் முருகப் பெருமான் -
o    போதல், வருதல்
o    இரவு, பகல்
o    புறம், உள்

·         வாக்கும் வடிவும் - எண்ணங்களே வாக்காகவும் பின் அவைகள் வடிவமும் கொள்கின்றன என்பது துணிபு.இவைகள் இல்லாத ஒன்று - இவைகள் அனைத்தில் இருந்தும் விலகி இருப்பவன் (முருகன்)
·         வந்து வந்து தாக்கும் - இறைமை நம்மை (விரும்பி) அழைத்துச் செல்கிறது.
·         இது மனதினை லயப் படுத்துகிறது.  - ஜப கோடி  த்யானம், த்யான கோடி லயம் என்ற தியாகராஜ சுவாமிகளின் வரிகள் நினைவு கூறத் தக்கது.
·         எனைத் தன் வசத்தே ஆக்கும் - இறைமையே நம்மை வசப்படுத்துகிறது

2.

பாடல்

தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில்ந
ணவடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துத் திசைக்கப் புறத்துந் திரிகுவையே. 96


பொருள்

முருகனது மயிலே, உலகியல் துன்பம் நீங்க உன்னை தனியாக விடுவாராயின், வட திசையில் இருக்கும் மேரு மலையைத் தாண்டி, உனது தோகையினால் சுழன்று, கடல், சூரியன், தங்கச் சக்கரம் ஆகியவைகளைக் கடந்து, திசைகளைக் கடந்து உலவுவாயாக.

கருத்து

மயில் என்பது குறீயீடாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. த்யான மார்க்க அனுபவங்கள் கூறப் பட்டிருப்பதால், குரு முகமாக அறிக.

Wednesday, February 5, 2014

இச்சா மரணம் - பீஷ்மர்

எண்ணற்ற கதா பாத்திரங்களை உள்ளடக்கியது மகாபாரதம். அதில் சிறந்த தலையாய படைப்புகளில் ஒன்று பீஷ்மர்.

பீஷ்மர் சந்தனு மகாராஜாவிற்கும், கங்கைக்கும் புதல்வனாக பிறந்தவர். இவர் அஷ்ட வசுக்களில் ஒருவர். பெற்ற சாபம் தீர தேவ விரதனாக அவதாரம் செய்தவர்.

ஒரு நாள் தனது தந்தை மிக்க மனவருத்தத்துடன் இருப்பதைக் காண்கிறார். சந்தனு காரணத்தை கூற விரும்பவில்லை. எனவே சந்தனுவின் தேரோட்டியை அழைத்து உண்மையை அறிகிறார்.

தந்தை சத்யவதி என்ற மீனவப் பெண்ணின் மீது காதல் கொண்டது தெரியவருகிறது.
எனவே அவர்களின் தலைவனை சந்தித்து தனது தந்தைக்கு சத்யவதியை மணம் முடித்துத்தர கேட்கிறார்.

சத்யவதியின் தந்தை மறுத்து விடுகிறார். காரணம் வினவுகிறார்.

பட்டத்து அரசியே தலைமை பீடப் பொறுப்புக்கு உரியவராகவும், அவர்களில் வாரிசுகளே ஆட்சி செய்ய தகுந்தவர்கள்  என்றும் இருப்பதால் சத்தவதியை சந்தனுவுக்கு மண முடிக்க விருப்பமில்லை என்று தந்தை உரைக்கிறார்.

இந்த நாள் முதல் பிரமச்சாரிய ஒழுக்கத்திலிருந்து தவறாதவனாகவும், திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பவனாகவும் இருப்பேன், இது சத்தியம் என்று சத்தியம் செய்கிறான் தேவவிரதன்.

'பீஷ்ம பீஷ்ம' என்று தேவர்கள் ஒலி எழுப்புகிறார்கள். பீஷ்ம என்ற சொல்லுக்கு ' யாராலும் செய்ய முடியாத காரியத்தை செய்பவன்' என்று பொருள்.

இந்த தியாகத்திற்காக சந்தனு பீஷ்மருக்கு தந்த வரம் - விரும்பிய பொழுது மரணம் .

சிகண்டியை முன்னிருத்தி அர்ஜுனன் அம்பு எய்தி பீஷ்மரை வீழ்த்தினான். அவர் தரையில் வீழ்ந்து விடக் கூடாது என்பதற்காக அம்பினால் படுக்கை செய்து(சரதல்லபம்), அவர் மரணம் வரும் வரை அதில் இருத்தினான்.

இது நடை பெற்றது, தஷ்ணாயன புண்ணிய காரம், உத்ராயண புண்ணியகாலம் வரை அவர் அம்புப் படுக்கையில் இருந்தார்.

பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் அக்காலம் வரை அவரை அணுகி உலகின் மிக நுட்பமாண மற்றும் சூட்சமான சாத்திரங்களையும் கற்று அறிந்தார்கள்.

விஷ்ணு சகஸ்ரநாமம் இவரால் எழுதப்பட்டது.

ரதசப்தமி - பீஷ்மாஷ்டமி - 06-02-2014/07-02-014


Image : Internet