Monday, May 2, 2016

சைவத் திருத்தலங்கள் 274 – திருஅச்சிறுபாக்கம்


தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் –

இறைவன் சுயம்பு மூர்த்தி, சதுரமான ஆவுடையார்
இரண்டு மூலவர்கள் சந்நிதி (அரசரை ஆட்கொண்ட இறைவனுன் உமையாட்சீஸ்வரர், திரிநேத்ரதாரி  முனிவரை ஆட்கொண்ட இறைவன் ஆட்சீஸ்வரர் சந்நிதி)
வித்யுந்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்களின் கோட்டைகளான பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றை தகர்க்க பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்ட இடம். அந்த நேரத்தில் வினாயகரை மறந்தால் அச்சு முறிந்து, பின் தவறை உணர்ந்து அவரை வழிபட வினாயகர் அச்சினை சரிசெய்த இடம்
சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் துவார பாலகர்கள்
அகத்தியருக்கு திருமணக் காட்சி அளித்தத் தலம்
அச்சுமுறி விநாயகர்"  கோவிலுக்கு வெளியே தனி சந்நிதியில் மேற்கு நோக்கி அமர்ந்த காட்சி
பிரமகபால மாலையுடன் பைரவர் காட்சி
திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம்,திருநாவுக்கரசரின் ஷேத்திரக் கோவையால் குறிப்பிடப்பட்ட தலம்
சரக்கோன்றை மரத்தடியில் பாண்டிய மன்னன் ஒருவனுக்கு ஈசன் காட்சி அளித்தத் தலம்
சித்தர்களின் அருளாணைப்படி பழனிச்சாமி முதலியார் என்பரால் அமைக்கப்பட்ட ஆறுமுகவேலவரின் திருக்கரத்தில் உள்ள வெள்ளியால் செய்யப்பட்ட பழனி ஆண்டவர் சத்ருசங்காரச் சக்கரம்  பொறிக்கப்பட்ட வேலாயுதம்

தலம்
அச்சிறுபாக்கம்
பிற பெயர்கள்
அச்சுஇறுபாகம்
இறைவன்
ஆட்சிபுரீஸ்வரர், உமைஆட்சீஸ்வரர், எமையாட்சீசர் (அச்சேஸ்வரர், அச்சு கொண்டருளிய தேவர்), பார்க்கபுரீஸ்வரர், ஆட்சீஸ்வரர், ஆட்சிகொண்டநாதர், ஸ்திரவாசபுரீஸ்வரர், முல்லைக்கானமுடையார்
இறைவி
இளம்கிளி அம்மை, உமையாம்பிகை, சுந்தரநாயகி, பாலாம்பிகை, மெல்லியலாள், அதிசுந்தரமின்னாள்.
தல விருட்சம்
சரக்கொன்றை
தீர்த்தம்
தேவ தீர்த்தம், சூரிய தீர்த்தம், சங்கு தீர்த்தம், சிம்ம தீர்த்தம்
விழாக்கள்


மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

அருள்மிகு ஆட்சீஸ்வரர் சுவாமி திருக்கோவில்
அச்சிறுபாக்கம் அஞ்சல்
மதுராந்தகம் வட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN - 603301
வழிபட்டவர்கள்
கண்வ முனிவர், கௌதம முனிவர், திரிநேத்ரதாரி முனிவர்
பாடியவர்கள்
அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் - 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
மேல்மருவத்தூரில் இருந்து 4 கி.மி
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 271 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 29  வது தலம்.

ஆட்சீஸ்வரர்


இளங்கிளி அம்மை


புகைப்படம் : தினமலர்


பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         1                     
பதிக எண்          077        
திருமுறை எண்    8         

பாடல்

கச்சுமொள்வாளுங் கட்டியவுடையர் கதிர்முடிசுடர்விடக் கவரியுங்குடையும்
பிச்சமும்பிறவும் பெண்ணணங்காய பிறைநுதலவர்தமைப் பெரியவர்பேணப்
பச்சமும்வலியுங் கருதியவரக்கன் பருவரையெடுத்ததிண் டோள்களையடர்வித்
தச்சமுமருளுங் கொடுத்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.


பொருள்

இத்தலத்து இறைவன், இறைவர் ஒளி பொருந்திய வாளைக் கச்சிலே பொருத்தி இடையில் ஆடையாகக் கட்டியுள்ளவர், ஒளி பொருந்திய முடி சுடர்விடக்கவரி, குடை, பீலிக்குஞ்சம் முதலியவற்றோடு பெண்களைக் கவரும் பிறை மதியை முடியிற்சூடி விளங்குபவர்.பெருமை உடைய அடியவர் தம்மை விரும்பி வழிபடுமாறு, தம் அன்பு வலிமை ஆகியவற்றைக் கருதித்தன்னைப் பெரியவனாக எண்ணிப் பெரிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்களை அடர்த்து அவனுக்குத் தம்பால் அன்பையும் அருளையும் கொடுத்த எம் அடிகள் ஆவார். அப்படிப்பட்ட இறைவன் அச்சிறுபாக்கத்தில் உறையிம் ஆட்சிபுரிஸ்வரர் ஆவார்



பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         1                     
பதிக எண்          077        
திருமுறை எண்    9  

பாடல்

நோற்றலாரேனும் வேட்டலாரேனு நுகர்புகர்சாந்தமொ டேந்தியமாலைக்
கூற்றலாரேனு மின்னவாறென்று மெய்தலாகாததொ ரியல்பினையுடையார்
தோற்றலார்மாலு நான்முகமுடைய தோன்றலுமடியொடு முடியுறத்தங்கள்
ஆற்றலாற்காணா ராயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொருள்

அச்சிறுபாக்கத்தில் உறையும் ஆட்சீஸ்வரர் தவம் செய்பவராக இல்லாவிட்டாலும், பிறரிடத்தில் அன்பு செய்பவராக இல்லாவிட்டாலும், வாசனை தரும் சந்தனமுடன் கையினில் மாலை ஆகிய முறைகளில் வழிபாடு செய்யாதவராக இருப்பினும் இவர் இவ்வாறானவர் எனப் பொருள் கொள்ளார். அறியமுடியாத தன்மையும் அடைய முடியாத அருமையும் உடைய இயல்பினராய் மாலும் நான்முகனும் பன்றியும் அன்னமுமாய்த் தோன்றி அடியையும் முடியையும் தங்கள் ஆற்றலால் காண இயலாதவாறு உயர்ந்து நின்றவர் எம்அடிகள்.

கருத்து

·         தவம் செய்வதும், மாலைகளுடன் பூசை செய்தலும் எதிர் எதிர் நிகழ்வுகள், ஒன்று புறப்பூசை, மற்றொன்று அகப்பூசை. இறைவன் இரண்டையும் கடந்தவர்.

·         நோற்றலார் - தவஞ்செய்யாதவர். வேட்டலார் - யாகஞ் செய்யாதவர்கள்

No comments:

Post a Comment