Friday, May 27, 2016

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 3


உமை :  உமது நிறம் செம்மட்டை நிறமானதும் விகாரமும் பயங்கரமானதும் சாம்பல் பூசப்பட்டதாகவும் விகாரமான கண்கள் உடையதாகவும் கூரான  கோரைப்பற்கள் உடையதாகவும் ஜடை உடையதாகவும் புலியின் தோல் உடுத்தியதாகவும் உமது நிறம் செம்மட்டை நிறமானதும் விகாரமும் பயங்கரமானதும் சாம்பல் பூசப்பட்டதாகவும் விகாரமான கண்கள் உடையதாகவும் கூரான கோரைப்பற்கள் உடையதாகவும் ஜடை உடையதாகவும் புலியின் தோல் உடுத்தியதாகவும் இருப்பது ஏன்?

சிவன் :  உலகில் குளிர்ச்சி, வெம்மை போன்று இருமைகள் இருப்பதால், அதைச் சார்ந்த உயிர்கள் சந்திரன் போன்று குளிர்வும், சூரியன் போன்று வெம்மையும் உடையதாக இருக்கின்றன. விஷ்ணுவானவர் குளிர் பொருந்திய வடிவம் உடையவராக இருக்கிறார். நான் வெம்மை பொருந்திய வடிவில் நிலையாக இருக்கிறேன். உக்கிர வடிவமும், சிவந்த கண்களும், சூலமும் கொண்ட இந்த தேகத்தால் எப்பொழுதும் உலகினைக் காக்கிறேன். இந்த ரூபம் உலகின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்டது. வேறு வடிவம் கொண்டால் உலகின் இயக்கங்களில் தடுமாற்றம் உண்டாகும். அதன் பொருட்டே இவ்வடிவம்.

உமை :  நீங்கள் சந்திரனை பிறையாக அணியக் காரணம் என்ன?

சிவன் :தட்ச யாகத்தின் பொருட்டு கோபமுற்று இருந்தேன். அதனால் தேவர்கள் என்னால் துரத்தப்பட்டார்கள். என்னால் உதைக்கப்பட்டும் கூட சந்திரன் என்னிடத்தில் நல்வார்த்தை பேசி என்னிடம் வேண்டிக் கொண்டான். அன்று முதல் சந்திரனை என் தலையில் அணிந்து கொண்டேன்.

இதன் பிறகு பல விதமான துதிகளால் ரிஷிகளும், முனிவர்களும் ஈசனையும், உமா தேவியையும் துதித்தனர்.

உமை :  நான்கு வகையான வழிமுறைகளான பிரம்மச்சாரியன், கிரகஸ்தன், வான பிரஸ்தன் மற்றும் சந்நியாசி இவர்களின் கடமைகளை கூறுங்கள்.


உமை :   இந்த ரிஷிகள் தவம் இயற்றுதலை முதன்மையாகக் கொண்டுள்ளனர். அது குறித்து விளக்க வேண்டும்.




தொடரும்..


              *வாருணை  - மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்


               புகைப்படம் : இணையம்





No comments:

Post a Comment