Wednesday, April 27, 2016

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் - 1


(
இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை
தொடக்கம் 204 அத்யாயம்.

கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்து 'உலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும்கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்என்றனர்.

'நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லைஅதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.

எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர்கிருஷ்ணருக்கு அன்பானவர்பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்

அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.
)

உமை : பகவானே உமது கீழ்திசை முகம் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறதே, வடக்கு மற்றும் மேற்கு திசை முகங்கள் பார்க்க அழகாக இருக்கிறது, தென் திசை முகம் ஜடைகளால் மூடப்பட்டு பயங்கரமாக இருக்கிறது அது ஏன்?

சிவன்    : கிழக்கில் உள்ள முகம் எப்பொழுதும் தவம் செய்து கொண்டிருக்கும்; தென் திசை முகம் பிரஜைகளை(உயிர்களை) சம்ஹாரம் செய்யும். மேற்கு திசை முகம் எப்பொழுதும் ஜனங்களின் காரியங்களை கவனித்துக் கொண்டிருக்கும். வட திசை முகம் எப்பொழுதும் வேதம் ஓதிக் கொண்டிருக்கும். இதன் காரணமாகவே வெவ்வேறு திசை முகங்கள் வெவ்வேறு விதமாக இருக்கிறது. இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?

உமை :    உமது கழுத்து மயில் போன்று கரு நீலம் உடையாதாக இருப்பது எதனால்?  

சிவன்  : முன்னொரு யுகத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த பொழுது எல்லா உலகங்களையும் அழிக்கும் விஷம் உண்டாயிற்று. தேவர்கள் முதலானவர்கள் அதைக் கண்டு அஞ்சினர். லோகத்தின் நன்மைக்காக அந்த விஷத்தை நான் அருந்தினேன். அதனானே தான் என் கழுத்து நீல நிறமானது, அதனாலே எனக்கு நீல கண்டன் என்ற பெயர் ஏற்பட்டது. இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?


உமை அனேக ஆயுதங்கள் இருக்க நீர் ஏன் பினாகத்தை வைத்து கொள்ள கருதுவது ஏன்?

சிவன்  : முன்னொரு காலத்தில் கண்வர் என்னும் மகரிஷி ஒருவர் இருந்தார். கடுமையாக தவம் செய்ததன் காரணமாக அவர் தலையில் நாளடைவில் புற்று உண்டானது.அதிலிருந்து மூங்கில் முளைத்தது.  அதனை பொறுத்துக் கொண்டு அவர் தனது தவத்தினை தொடர்ந்து செய்து வந்தார். தவத்தினால் பூஜிக்கப்பட்ட பிரம்ம தேவர் அவருக்கு வரம் அளித்து பின் அந்த மூங்கிலை எடுத்து வில்லாக செய்தார். என்னிடத்திலும் விஷ்ணுவிடத்திலும் சாமர்த்தியம் இருப்பதை அறிந்து இரண்டு வில் செய்து எங்களிடம் அளித்தார். பினாகம் என்பது என் வில். சார்ங்கம் என்பது விஷ்ணுவின் வில். அவ்வாறு செய்தது போக மீதமிருந்த மூங்கிலையும் வில்லாக செய்தார். அதுவே காண்டீவம். குற்றம் அற்றவளே, இந்த ஆயுதங்களின் வரலாற்றை உனக்குச் சொன்னேன், இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?

உமை வேறு வாகனங்கள் இருக்கையில் நீங்கள் ஏன் ரிஷபத்தை வாகனமாக கொண்டுள்ளீர்கள்?

தொடரும்

*வாருணை  - மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்
புகைப்படம் : இணையம்


No comments:

Post a Comment