Saturday, August 29, 2015

மகேசுவரமூர்த்தங்கள் 18/25 சலந்தாரி



வடிவம்(பொது)

·         சலந்தரன் என்னும் அரக்கனை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட வடிவம்
·         உருவத்திருமேனி
·         வாகனம் – காளை

வேறு பெயர்கள்

சலந்தராகரர்
சலந்தர சம்மார மூர்த்தி
கடல் வளர்ந்தானைக் கொன்றான்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

·         திருவிற்குடி, திருவாருர்
·         மீனாட்சி அம்மன் கோயில், மதுரை

இதரக் குறிப்புகள்

நூல்கள்
1.
·         இலிங்க புராணம்
·         சக்ராயுதம்

2.
திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி
சலந்தர னாகந் தரித்தார்தந் தாதன் றனதிடைச்சஞ்
சலந்தர னாகந் தரைநடந் தாலெனச் சார்ந்ததண்டன்
சலந்தர னாகந் தளரச்செற் றார்தன யன்றலநச்
சலந்தர னாகந் தனக்கிறை சேர்செந்திற் சார்ந்திடற்கே. 

3.
சிவஞானசித்தியார் பரபக்கம்
அஞ்சியன் றரிதா னோட அசுரனைக் குமர னாலே 
துஞ்சுவித் தொருபெண்ணாலே தாரகன் உடல்துணிப்பித்(து) 
அஞ்சிடப் புரம்தீ யூட்டிச் சலந்தர னுடல்கீண் டோத 
நஞ்சினை யுண்டு மன்றோ நாயகன் உலகங் காத்தான்.           292

4.
சலந்தர முத்திரை என்பது வாசி யோகத்தில் உள்ளது. இந்த உபதேசங்கள் சுப்ரமணியரால் அகத்தியருக்கு அருளப்பட்டது.
5
11ம் திருமுறையில்  பொன் வண்ணத் தந்தாதி பகுதிகளிலும் இவ்வடிவம் குறித்து பேசப்படுகிறது.
6
சலந்தரன்றன் உடல்தடிந்த சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி விமானஞ்சேர் மிழலையாமே 1.132.8

சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும் 2.48.7

சதிமிக வந்த சலந்தரனே தடிசிர நேர்கொள் சலந்தரனே 3.113.2

தன்றவம் பெரிய சலந்தர னுடலந் தடிந்த சக்கரம்  எனக்கு அருள் என்று
ன்று அரி வழிபட்ட்டு இழிச்சிய விமானத்து இறையவன் பிறை அணி சடையன் 3.119.7

சம்பரற் கருளிச் சலந்தரன்வீயத் தழலுமிழ் சக்கரம் படைத்த 3.122.2

சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ பின்னோ 6.34.7

கற்பொலிதோள் சலந்தரனைப் பிளந்த ஆழி 6.52.7

சமரம் மிகு சலந்தரன்போர் வேண்டி னானைச்
சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும் 6.53.2

சலந்தரனைப் பிளந்தான் பொன் சக்கரப்பள்ளி  6.71.1

சலந்தரனைப் பிளந்தான் கண்டாய் 6.73.5

உரமதித்த சலந்தரன்றன் ஆகங் கீண்ட
ஓராழி படைத்தவன் காண்              6.76.10

அரிந்தானைச் சலந்தரன்றன் உடலம் வேறாய் 6.86.6

சலந்தரனைத் தடிந்தோனை 6.90.9

விளிந்தெழுந்த சலந்தனை வீட்டி னானை 6.91.2

செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி 7.16.2

சலந்தரன் ஆகம் இருபிள வாக்கிய சக்கரமுன்
நிலந்தரு மாமகள் கோன் நெடு மாற்கருள் செய்தபிரான் 7.98.5

சலமுடையசலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி 8.272

கம்பம் சிவந்த சலந்தரன் ஆகம் கறுத்த தில்லை 8/2. 209

தக்கன் வெங்கதிரோன் சலந்தரன் பிரமன் சந்திரன் இந்திரன் எச்சன்
மிக்க நெஞ்(சு) அரக்கன் புரம்கரி கருடன் மறலி வேள் இவர்மிகை செகுத்தோன் 59.5

பொங்கும் சலந்தரன்   போர்ச்செய்ய நீர்மையின்
அங்கு விரற் குறித் தாழிசெய் தானே 10.642

சலந்தர னைத்தழலாப் பொறித்தாய் 11.81

சலந்தரனார் பட்டதுவும்  தாம் 11.385

சலந்தரன் உடலம் தான் மிகத் தடிந்தும் 11.491

சலந்தரனைச் சக்கரத்தால் ஈர்ந்தரிதன் தாமரைக்கண் சாத்துதலும்
மிக்கஅஃ தீந்த விறல்போற்றி-27  11.500

சலந்தரனைக் கொன்றிட்டுச் சங்கரனார் என்னோ
சலந்தரனாய் நின்றவா தாம் 11.704

சலந்தரன் தடிந்த தண்டம் போற்றி 11.865

சலந்தரனைப் போக்க 11.913

சலந்தரன் உடலம் தடிந்தனை என்றும் 11.920

கனல்திகிரி சலந்தரன் ஆகம் ஒழிக்கவைத் தாய் 11.933

புகைப்படம் : இணையம்






No comments:

Post a Comment